முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகளிர் நாள் சிந்தனை

*இந்து சமூகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம சொத்துரிமை வேண்டும்.
(26 27.5.1928-இல் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாட்டுத் தீர்மானம்).

*பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலையில் பெண்களையே அதிகமாக நியமிக்கவேண்டும். ஆரம்பப்பள்ளிக் கூட உபாத்தியாயர்கள் வேலைக்குப் பெண்களையே நியமிக்கவேண்டும்.
*ஆண்கள் தங்கள் மனைவிகள் காலம் சென்று விட்டால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை இருப்பதுபோலவே எல்லாப் பெண்களுக்கும் புருஷன் இறந்துபோனால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை வேண்டும்.
*ஒவ்வொரு வாலிபர்களும் கூடுமானவரை தங்களுக்கு ஏற்ற விதவைகளையே விவாகம் செய்துகொள்ள வேண்டும்.
(1718.2.1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்றமுதல் சுயமரியாதை மாநில மாநாட்டுத் தீர்மானம்)

*சொத்தில் உரிமைப் பாத்தியம் குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம் சுவீகாரம் எடுத்துக்கொள்ளல் இவற்றில் ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமை தேவை.
*மணமக்களுக்குள் வாழ்க்கை நடத்துவதில் கசப்புணர்வுகள் வந்தால் அவர்கள் விவாகத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றவேண்டும்.
*பெண்களுக்கு விலை கொடுக்கும் வழக்கம் ஒழியவேண்டும்.
(7 8.4.1931-இல் செட்டிமார் நாட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம்)

*பெண்கள் உண்மையான விடுதலையும் சுதந்திரமும் சமதர்ம ஒழுக்கமும் பெறவேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ள பிள்ளைகளைப் பெறுதல் என்னும் கர்ப்பத்தை அடக்கி ஆளவேண்டும்.
(8 9.8.1931-இல் விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதைப் பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்)

*விவாகங்களைப் பதிவு செய்யவேண்டும்.
*சென்னையில் உள்ள விதவைகள் விடுதியில் பார்ப்பனப் பெண்களுக்கு மட்டும் தனிச்சலுகை இருப்பதை மாற்றவேண்டும்.
*பெண்களுக்கு அரசியலில் ஆண்களைப் போல் எல்லா உத்தியோகங்களையும் அடைய சுதந்திரமும் கவுரவ ஸ்தாபனங்களில் சரிசமமான பிரதிநிதித்துவமும் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
(3031.3.1935-இல் விருதுநகரில் முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டுத் தீர்மானம்)

*சர் ஹரி சிங்கோர் அவர்கள் விவாகரத்துச் சம்பந்தமாய் இந்திய சட்டசபையில் கொண்டுவர இருக்கும் சட்டத்தை ஆதரிக்கிறோம். பொது ஜனங்களும் இந்தச் சட்டத்தை வெகுவாக ஆதரிக்கவேண்டும்.
(2.12.1933 இல் சிவகங்கை சுயமரியாதை மாநாடு)

*பெண்களின் திருமண வயது 16-க்குமேல் இருக்கவேண்டும்.
(20.11.1943-இல் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு).


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதே மாதிரிதான் இவை எல்லாம்.ஒரு சொட்டு ரத்தத்தில் உடலின் ஆரோக்கியத்தைக் கண்டு பிடிப்பதுபோல ஒரு சில தீர்மானங்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று கொண்டாடப்படுகிறதே - அத்தகைய அமைப்புகளுக்கு திராவிடர் கழகத்திற்கென்று உள்ள இத்தகைய பின்பலமும் வரலாற்றுப் பெருமையும் சாதனைகளும் இருக்க முடியுமா? கண்டிப்பாக இல்லை - இல்லவே இல்லை. கற்பனை செய்துகூடப் பார்க்கப்பட முடியாத காலங்களில் பகுத்தறிவுப் பகலவனின் ஒளியில் பூத்த கருத்து மின்னல் பூக்கள் இவை.இந்தத் தீர்மானங்கள் சிலவற்றை இன்றைக்குக் கூட சீரணிக்க முடியாத அளவுக்கு ரத்தக் குழாய் வெடிப்புக்கு ஆளாவோர் உண்டு. தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்களோ அவரின் காலத்தை வெல்லும் வேக ஓட்டத்தில் போகிற போக்கில் உதிர்ந்துவிட்டுச் சென்றவை இவை!உலக மகளிர் நாள் கொண்டாடும் அன்பர்கள் அமைப்புகள் அரசுகள் இந்த இயக்கத்தின் சீர்மையை உள்வாங்கிக் கொண்டு உரத்த பார்வையோடு மக்களிடம் இச் சிந்தனைகளை கொண்டு செல்ல ஒத்துழைப்பார்களா? உலக மகளிர் நாளில் கழகம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்.

மீதி - வரும் சனியன்று திருவொற்றியூரில் நடக்க இருக்கும் பெண்கள் விடுதலை மாநாட்டில்!திருவொற்றியூர் - நீதிக்கட்சி தன்மான இயக்க வரலாற்றில் வரலாற்று முத்துகளைத் தூவி நிற்கும் பேரூர்!திருவொற்றியூர் சண்முகனார் பற்றி `குடியரசு மிக விரிவாகவே பேசுகிறது.அத்தகு ஊரில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒப்பரிய மாநாடு இது. பெண்களால் என்ன செய்ய முடியும் - என்ன சாதிக்க முடியும் என்று கேட்கிறீர்களா - சனியன்று திருவொற்றியூருக்கு வந்து பாருங்கள் - புரியும்!

நன்றி - விடுதலை(08-03-07)
www.viduthalai.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam