முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளி வாழ்த்துகள்!

பெரியாரிடமிருந்துதான்...

காரணமில்லாமலில்லை.

தீபாவளி என்று சொல்லப்படும் பண்டிகையின் தத்துவம் என்று சொல்லப்படுவது என்ன?

தீமை செய்தவருக்கு தண்டனை கிடைத்த நாளே தீபாவளி!
அப்படியெனில் இன்று நான் தீபாவளி வாழ்த்து சொல்வது சரியானது தான்.
இந்திய அரசாங்கமே தண்டத்தில் தொங்கும் கோவணத் துணியில் தான் முடிச்சிடப்பட்டிருக்கிறது என்ற மமதையில் திரிந்த ஒரு கொலைகாரன் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 11-ஆம் தேதி இரவில்தான் கைது செய்யப்பட்டான்.

தண்டத்தை தூக்கிப்போட்டுவிட்டு நேபாளப் பெண்ணோடு ஓடியவனைத் தேடிக் கண்டுபிடிக்க அன்றைய குடியரசுத்தலைவராக இருந்த வெட்கங்கெட்டவனின் மனைவி தலைமையில் அமைக்கப்பட்டது குழு. அக்குழு விளக்குப் பிடித்தபடி தேடி தலைக்காவிரியில் போய் சல்லாபம் செய்து கொண்டிருந்தவனைப் பிடித்து வந்தது.


'கோவணம் காயவைக்கும் தண்டத்தை விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே!' என்று கேட்டதற்கு, "தண்டத்தின் சக்தியை என்னுடலில் ஏற்றிக் கொண்டேன்" என்றது நடுவால்.


இதனால் ஆதிசங்கரன் அமைத்த நான்கு பீடங்கள் தவிர, ஐந்தாவதாக உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் மடத்தின் பெரிய வால் அதிர்ச்சிக்குள்ளானது. அதற்கிடையில் 'குட்டி வால்' ஒன்றுக்கு 'பெரியவால்' பட்டம் கட்டிவிட, திரும்பி வந்த தண்டமும் வெட்கமில்லாமல் தண்டத்தைத் தூக்கி தோளில் சுமந்தது.


பின்னர் பெரியவால், நடுப் பெரியவால், குட்டிவால் என்று மூன்றும் காந்தியின் மூன்று குரங்குகளை நினைவுபடுத்தியபடி திரிந்தன.

பல காலம் பிணம் போலக் கிடந்த பெரியவாலுக்கு சதாபிஷேகம் நடத்தி அதன் தலையில் பொற்காசுகளைக் கொட்டி சாகடித்த பின்பு பெரியவால்-ஆக பட்டம் கட்டிக்கொண்ட நடுப்பெரிசு, தனது சல்லாபங்களை மடத்திற்குள்ளேயே அரங்கேற்றிக் கொண்டது. அதன் வயதுக்கேற்ற அளவு அது பார்த்துக்கொள்ள, சிறிசு அது வயதுக்கேற்ற சொர்ணங்களைப் பார்த்துக் கொண்டது.

இது பொறுக்காத மொட்டைக் கடுதாசி சங்கர்ராமன், தன் புலம்பலை ஊருக்குச் சொல்ல மென்னியை நெறித்து, கோயிலுக்குள்ளேயே கொலை செய்துவிட்டுப்போனது ஊத்தவாயின் கும்பல்.

எதையும் உளறிக்கொட்டியே மாட்டி பழக்கப்பட்ட ஊத்தவாய், இதிலும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது. 'என் கால் விரல் நகத்துக்குப் பங்கம் வந்தாலும், பொறுக்காத பக்தர்கள் செய்திருக்கலாம் என்று பெருமை பாடியது.

அப்புறம் அது மாட்டிக் கொண்டு நாறிய கதைதான் அனைவருக்கும் தெரியுமே? இன்னும் அதன் படுக்கையறை பிரதாபங்களையும், சங்கரமட சல்லாபங்களையும் தொடர்கதையாகப் படித்தோமே!

இப்படி அதிகாரத்தின் உச்சியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருந்த அதுகளுக்கு ஆப்பு வைத்து அடக்கப்பட்ட நாள் தானே தத்துவப்படி உண்மையான தீபாவளி! அதனால் தான் இந்த வாழ்த்துகள்!

ஆனால் வழக்குமன்றத்தின் அதிகாரத்தில் இருக்கும் பூணூல்களின் கொட்டமடங்கி, இன்னும் முடியாமல் இருக்கும் வழக்குகளை விரைந்துமுடித்து தீர்ப்பு வழங்கி அதிகாரப்பூர்வமாக அவ்வாளுக்கு ஆப்படித்து, தீபாவளித் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே நம் அவா!


புலனடக்கத்தின் அடையாளமாக சொல்லப்படும் காந்தியின் குரங்குகளை, புலனடக்கப் பொன்விழா கொண்டாடிய பொறுக்கிக் கும்பலோடு ஒப்பிட்டமைக்கு குரங்குகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam