முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்துச் சீர்திருத்தம் (விளக்க ஆவணப் படம்)

"தமிழைக் காட்டுமிராண்டி மொழி" என்றார் பெரியார் என்று 'சோ' போன்ற சவுண்டிகளும், அதைக் கேட்டுக் கொண்டு நம்மவர்களிலேயே சில அரைவேக்காடுகளும் பெரியார் மீது சேற்றை வாரி இறைக்கத் தலைப்படுவார்கள்.


ஆமாம். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்றுதான் கூறினார். உண்மைதானே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியிருந்தால் அது காட்டுமிராண்டி காலத்து மொழியாகத் தானே இருக்க முடியும். ஆனால், அதுதான் பெரியார் அப்படிச் சொல்லக் காரணமா? இவ்வாண்டு விடுதலை தந்தை பெரியார் 129-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் விளக்கியிருக்கிறாரே முனைவர் தமிழண்ணல். அவரைவிட யாரே சொல்ல முடியும்? (விரைவில் அந்தக் கட்டுரையைப் பதிவிடுகிறேன் அல்லது சுட்டி தருகிறேன்.)


தமிழ்மக்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கொண்ட தந்தை பெரியார் ஒருவரால்தான் அப்படிச் சொல்ல முடியும். அவருக்கு மட்டுமே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு. ஏனெனில் துவண்டு கிடந்த தமிழுணர்வையும், தூங்கிக் கிடந்த திருக்குறளையும் மாநாடுகள் போட்டு தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார். மறுக்க முடியுமா?


காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் அடையும் எதுவொன்றும்தான் நிலைத்து நிற்கமுடியும். மக்களின் பயன்பாட்டுக்கு உரிய மொழியாக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் உள்ள மொழியாக தமிழ் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் வளர்ச்சிக்கும், மொழியின் வளர்ச்சிக்குமே வாய்ப்பிருக்கும்.


அப்படியில்லாமல், தமிழே தமிழனின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்ற நிலை வருமேயாயின் அப்போது அந்தத் தமிழையும் தூக்கி எறியும்படிக் கூறும் துணிச்சலும் தந்தை பெரியாருக்கு மட்டுமே உண்டு. வெறுமனே 2000 வருமாக இருக்கும் தமிழை படித்தவனுக்கு சம்பளம் ரூ.2000/-; 25 வருசத்துக்கு முன்னால் வந்த (கணினி) பொட்டியை படித்தவனுக்கு 2 லட்சம் சம்பளம் என்று புலம்புவது சரியாகுமா?


ஆனால் அப்படி தமிழை புறக்கணிக்கும் நிலை வரக்கூடாது என்பது தானே அவரது அவா. அதன் காரணமாகத் தான் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்த தமிழுக்கு தெய்வீக ஒப்பனை போடப்பட்டு பின் தங்கிப் போய்விடாமல் பாதுகாக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைதான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்.


தனது அனைத்து இதழ்களிலும் அதை பின்பற்றியதோடு, இன்னும் எவ்வளவு தூரம் இதில் சிந்தனையை செலுத்தலாம் என்னும் அளவுக்கு ஆழமாக யோசித்தவர் பெரியார். ஒலிக் குறியீடுகளைத் தவிர வரிவடிவம் அவ்வப்போது மாறியே வந்திருக்கிறது என்ற உண்மையை முன்னிறுத்தி அவர் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அவரது நூற்றாண்டு விழாவையொட்டி அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு ஆணையிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தது.


பின்னர் அதை மலேசியா, சிஙப்பூர் உள்ளிட்ட தமிழ்மக்கள் அதிகம் வாழும் நாடுகளும் எற்றுக் கொண்டது என்பதும், அவை பெரியார் எழுத்துக்கள் என்றே அழைக்கப்பட்டு சிறப்புற்றன என்பது வரலாறு.


அதன் தொடர்ச்சியாக நிகழ வேண்டிய பணிகளை முடுக்கிவிட எண்ணிய தமிழர்தலைவர் அய்யா வீரமணி அவர்கள், முன்னாள் துணைவேந்தரும், தமிழாய்ந்த அறிஞரான முனைவர் வா.சே. குழந்தைசாமி போன்ற தமிழறிஞர்களை ஊக்குவித்துக் குழு அமைத்தார். அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விடுதலையில் பழைய எழுத்து முறையும், புதிய சீர்திருத்த எழுத்துகளும் இப்போது தனியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.


அப்படி மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாத எழுத்துச் சீர்திருத்தம் பற்றி விரிவான கட்டுரை ஒன்ரை நான் எழுதுவதைவிட, அய்யா முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் எழுதிய கட்டுரையின் திரை வடிவத்தைப் பதிவிடுவது இன்னும் பயனுடையதாகும். கணியத் தமிழின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆவணப் படத்தினை என் தளம் வழியாக வெளிக்கொண்டுவருவதில் பெரும் மகிழ்வும் பெருமிதமும், மனநிறைவும் அடைகிறேன்..





என் பதிவில் படம் தெரியாதவர்கள் இங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam