முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித் தொகைக்கு நிபந்தனை ரத்து

மத்திய அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் பெற குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்ஹிக்க இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் மாணவர்களும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் குரலெழுப்பினார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
தமிழ்க முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசின் இந்த நிபந்தனையாஅல் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தமிழக அரசே அந்த நிதிஉதவியினை செய்யும் என்று அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மற்ற மாநில மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
திராவிடர் கழகம் கடந்த 16-ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல் தலைமுறையாக, மிகவும் பிந்தங்கிய பகுதிகளில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வருவோரின் வாய்ப்பை இந்த நிபந்தனை மூலம் கெடுத்துவிடக்கூடாது என்று குரலெழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலைஞரின் கடிதம் பற்றி விவாதிக்கப்ப்பட்டு, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகைக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் இது. உடனடிக் குரல் எழுப்பி உதவிய கலைஞர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், போராட்டக் களத்தில் குதித்த மாணவர்களுக்கும் இவ்வெற்றி உரித்தாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam