மத்திய அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் பெற குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்ஹிக்க இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் மாணவர்களும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் குரலெழுப்பினார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
தமிழ்க முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசின் இந்த நிபந்தனையாஅல் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தமிழக அரசே அந்த நிதிஉதவியினை செய்யும் என்று அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மற்ற மாநில மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
திராவிடர் கழகம் கடந்த 16-ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல் தலைமுறையாக, மிகவும் பிந்தங்கிய பகுதிகளில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வருவோரின் வாய்ப்பை இந்த நிபந்தனை மூலம் கெடுத்துவிடக்கூடாது என்று குரலெழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலைஞரின் கடிதம் பற்றி விவாதிக்கப்ப்பட்டு, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகைக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் இது. உடனடிக் குரல் எழுப்பி உதவிய கலைஞர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், போராட்டக் களத்தில் குதித்த மாணவர்களுக்கும் இவ்வெற்றி உரித்தாகிறது.
தமிழ்க முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசின் இந்த நிபந்தனையாஅல் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தமிழக அரசே அந்த நிதிஉதவியினை செய்யும் என்று அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மற்ற மாநில மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
திராவிடர் கழகம் கடந்த 16-ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல் தலைமுறையாக, மிகவும் பிந்தங்கிய பகுதிகளில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வருவோரின் வாய்ப்பை இந்த நிபந்தனை மூலம் கெடுத்துவிடக்கூடாது என்று குரலெழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலைஞரின் கடிதம் பற்றி விவாதிக்கப்ப்பட்டு, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகைக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் இது. உடனடிக் குரல் எழுப்பி உதவிய கலைஞர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், போராட்டக் களத்தில் குதித்த மாணவர்களுக்கும் இவ்வெற்றி உரித்தாகிறது.
கருத்துகள்