முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோதல் போக்குதான் நோக்கம்!

மோதல் போக்குதான் நோக்கம்!

- மின்சாரம்

தந்தை பெரியாரின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனதிற்குச் சொந்தமானவை. அவை பதிப்புரிமை பெற்றவை என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் அறிவிப்பினை செய்தாலும் செய்தார்-
இது என்ன அநியாயம்! பெரியாரின் சிந்தனைகள் தனி உடைமையா? பெரியாரின் கருத்துகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டாமா? - அதனைத் தடுப்பதா? என்று பெரியார் கொள்கையைப் பரப்புவதற்கென்றே பிறந்தவர்கள்போல் தாம் - தூம் என்று எகிறிக் குதிக்கிறார்கள். கருத்துப் பஞ்சம் ஏற்பட்டு வற்றிப் போய்க்கிடக்கும் சில இதழ்களும், தொலைக்காட்சிகளும் ஆகா - கிடைத்தது ஒரு விஷயம்; அதை வைத்துக் காலட்சேபம் செய்வோம் என்று புறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதுதான் சந்தர்ப்பம் என்று பார்ப்பனர் ஒருவர் கூடப் புறப்பட்டு விட்டார் - பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அவ்வளவு ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது அவாளுக்கு. தொலைக்காட்சி ஒன்றில் ஒருபட்டி மன்றத்தையே நடத்தினர். பொதுவாக நடுவராகயிருக்கின்றவர் திறந்த மனத்தோடு ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும். அந்த இலக்கணம் கூடத் தெரிந்து கொள்ளாமலே சில்க் புகழ் வீரர் நடுவராக அமர்ந்து வாய்ச் சவடால் அடித்தது பரிதாபமானது.
எங்களுடைய நோக்கத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் - என்று நடுவராக இருக்கிறவரே சொல்லிவிட்ட பிறகு, மற்ற பேச்சாளர்களைப்பற்றி கேட்கவா வேண்டும்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியாரை சிறை வைக்கலாமா? அவர் கருத்துகள் போய் சேர்வதைத் தடுக்கலாமா? என்கிற போக்கிலே, தட்டிக் கேட்க ஆளில்லாதால் சண்டப் பிரசண்டம் செய்தனர்.
அவர்கள் யாருக்குமே திராவிடர் கழகம் என்ன செய்கிறது? எவ்வளவு நூல்களை வெளியிட்டிருக்கின்றது? எத்தனைக் குறுந்தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன? என்பது பற்றிய அடிப்படைத் தகவல்கள் இல்லாமல் - தெரிந்துகொள்ளவும் ஆசைப்படாமல், முயற்சியும் செய்யாமல் கேமிரா முன் உட்கார வாய்ப்புக் கிடைத்ததே என்று வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக் கொட்டினர்.
தன்மான இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலந்தொட்டு, வேறு எந்த காலகட்டத்திலும் இவ்வளவு பகுத்தறிவு நூல்கள் வெளியிட்டதில்லை என்கிற அளவுக்கு 338 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தலைப்பு வாரியாக இதுவரை ஒரு தொகுதியைக்கூட வெளியிடவில்லை என்று குற்றப்பத்திரிகை ஒன்றைப் படித்தார் ஒருவர் - பெயர் சூரியதீபனாம் - ஆனால், அவர் அறிவோ தீபத்தில் கருகிப் போய்விட்டதை அறிய முடிகிறது. களஞ்சியம் தொகுதிகள் கடவுள்-2, மதம் தொகுதிகள் - 7, பெண்ணுரிமை தொகுதிகள் - 5, ஜாதி தீண்டாமை ஒழிப்பு - 17, இவற்றோடு குடிஅரசு இதழ்கள் - குறுந்தகடுகள் - 19 வெளியிடப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டதோடு மட்டுமல்ல - இவற்றை தமிழ்நாடு முழுமையும் கொண்டு சேர்க்க இரு நடமாடும் வாகனங்கள் மாதம் முழுவதும் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன.
புத்தகக் கண்காட்சி எங்கெல்லாம் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அந்நூல்களை விற்பனை செய்வதற்கென்றே தனிக் குழுவே இருக்கிறது!
முக்கிய நகரப் பேருந்து நிலையங்களில் எல்லாம் புத்தகக் கடை சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் அத்தகைய விற்பனையகங்களைத் திறந்திட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு தலைவரின் கருத்துகளைப் பரப்பிட திராவிடர் கழகமும் அதன் தலைவரும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, செயல்பாடுகளுக்கு நிகராக உலகில் வேறு எந்த அமைப்பையோ, தலைமையையோ சுட்டிக்காட்ட முடியுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.
பெரியாரின் கருத்துகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை என்று கூறுவது அறியாமையா? அல்லது மனமறிந்த பொய்யுரையா? பெரியார் கொள்கைகள்மீது இவ்வளவு அக்கறை உள்ளதுபோல பம்மாத்து செய்யும் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், பெரியாரின் கருத்துகளை - பகுத்தறிவுச் சிந்தனைகளை - பரப்பிட ஒரு அய்ந்து நிமிடம் நாள் ஒன்றுக்குச் செலவழித்ததுண்டா?
இந்தப் பிரச்சினை கூட ஒரு நல்ல தீனி என்கிற முடிவில் - வியாபாரத்துக்கான ஒரு சரக்கு - தலைப்பு என்பதைத் தவிர, வேறு தந்தை பெரியாரின் கொள்கைகள் பரவ வேண்டும் என்ற நல்லெண்ணமா? நாள் முழுவதும் மூடக் குப்பைகளைக் கொட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள், பெரியார் கொள்கை மீது திடீர்க் காதல் கொள்வதை நினைத்தால் வாயால் சிரிக்க முடியாது.
அறிவுக்குத் தடையா? என்று தாண்டி குதித்தார் ஒரு பார்ப்பனர். அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். எப்படி தெரியுமா? 1982 இல் மூன்று இதழ்கள்; 1985 இல் ஆறு இதழ்கள், 2002 இல் மீண்டும் துளிர்த்து வந்த வேகத்திலேயே கருகி விட்டது.
ஒரு இதழைக்கூட ஒழுங்காக நடத்த இயலாத துப்புக்கெட்டதுகள் எல்லாம் 74 ஆண்டு காலம் ஏடு நடத்தி நாள்தோறும் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பும் இயக்கத்தின்மீதும், தலைவர்மீதும் குப்பை வாரி இறைக்கிறார்.
நா தழும்பேற கருணாநிதியும் வீரமணியும் பெரியாருக்குத் துரோகம் செய்துவிட்டதாக பேசிய இந்தப் பார்ப்பனர், இதுதான் சந்தர்ப்பம் என்று கலைஞர்மீது காழ்ப்புணர்வைக் கொட்டுகின்றனர்.
இடையில் நேயர் ஒருவர் குறுக்கிட்டு (கும்பகோணத்துக்காரர்) புத்த ஜாதக கதை போல் கயிறு திரித்தார். சிலவற்றை பெரியார் சொன்னதுபோல கதைத்தார். பெரியார் வாழ்ந்த இந்தத் தலைமுறையிலேயே இப்படிப் புளுகுகிறவர்கள் என்றால் பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிட அனுமதித்தால் எவ்வளவு ஆபத்து என்பதை இது உணர்த்துகிறது.
இன்னொரு நேயர் - சந்தடி சாக்கில் பந்தலிலே பாகற்காய்... ஒன்றைப் பாடினார்.
பெரியார் நூல்களை அரசுடமை ஆக்கினால் பெரியார் சிந்தனைகள் தொகுப்புக்காக அந்தப் பணத்தை ஆனைமுத்து அவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று ஒரு மகஜரையும் கொடுத்துவிட்டார்.
அது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பெரியார் சிந்தனைகள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளை தோழர் ஆனைமுத்து வெளியிட்டார். சிந்தனையாளர் கழகத்தின் சார்பில்.
34 ஆண்டுக் காலமாக மறு பதிப்புச் செய்யவில்லை; என்பதால் அதனைப் பதிப்பிக்க மற்றவர்கள் யாரும் முன் வரவில்லையே - ஏன்? அதுபற்றி கோரிக்கையை (நமது நோக்கம் அது அல்ல) எழுப்பாதது ஏன்? திராவிடர் கழகத்தோடு - அதன் தலைவரோடு மோதல்போக்கை உண்டாக்க எப்படியோ குறுக்கு வழியில் விளம்பரம் தேடும் அற்ப ஆசை அல்லாமல் இது வேறு என்ன?
தோழர் ஆனைமுத்து அவர்கள் அந்தத் தொகுதிகளை வெளியிட்ட போது - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை என்று ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வியை எழுப்பினாரே பார்க்கலாம்!
இவ்வளவு அறியாமை இருட்டில் அவர் இருப்பார் என்று நினைக்கவில்லை. இதில் கறுப்புச் சட்டை வேறு - கறுப்புச் சட்டை போட்டவர்களை எல்லாம் பெரியாரிஸ்டாக நினைக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!)
அந்தத் தொகுதிகள் கூட தந்தை பெரியார் அவர்களின் அனுமதிபெற்றுத்தான் கொண்டு வரப்பட்டது - பதிப்புரிமை பெற்றது என்பதை இப்பொழுதுதாவது அவரைப்போல இருட்டில் சஞ்சரிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்!
என்.சி.பி.எச். என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது வெளியிடும் நூல்களை அப்படியே மற்றவர்கள் வெளியிட முடியுமா?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் - பெரியார் கருத்தை மற்றவர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பது போலவும், முடக்குவது போலவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டை திருப்பித்த திருப்பி, ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு தெரிவித்தது விஷமத்தனமானது - கண்டிக்கத் தக்கதாகும்.
தெருமுனைக் கூட்டங்கள் போடட்டும், பொதுக்கூட்டங்கள் நடத்தட்டும், பேரணிகளையும் அணிவகுக்கச் செய்யட்டும். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி ஏராளமான நூல்களை வெளியிடட்டும். நமது வெளியீடுகளிலிருந்து மேற்கோள்களைக் காட்டட்டும்! பெரியார் திடல் நூலகம், ஆய்வகத்துக்கு வந்து ஆய்வுப் பணிகளை அறிவு ஜீவிகள் மேற்கொள்ளட்டும் - வரவேற்கதக்கதாகும்.
ஆனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள பதிப்புரிமை பெற்ற நூல்களை தங்கள் வெளியீடாகக் கொண்டு வர யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி சில நூல்களை கொஞ்சமும் அறிவு நாணயமின்றி வெளியிட்டு தங்களின் தராதரத்தை புலப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட குடிஅரசு பகுத்தறிவு, திராவிடன், விடுதலை, உண்மை முதலிய இதழ்களை அப்படியே வெளியிடுவதைத்தான் கூடாது என்கிறோமே தவிர, வேறு எந்தத் தடையும் இல்லையே!
ஒரு சர்ச்சையைக் கிளப்பி விளம்பரக் குளிர்காய வேண்டும் என்கிற குறுக்குப் புத்திதான் இதில் புதைந்து கிடக்கிறது.
மோதல் போக்கு என்னும் வெறிபிடித்து அலைகிறார்கள் - இது பண்பாடல்ல!
குடிஅரசு இதழ்களை குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளோம் - அவற்றைப் பயன்படுத்தி அப்படியே நூலாக வெளியிடுவது தார்மிக அடிப்படையில் சரியானதுதானா? என்ற கேள்விக்கு நியாயப்புத்தியோடு பதில் சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் மாபெரும் சமூகப் புரட்சியாளர். அவர் தம் படைப்புகளை வெளியிடும்போது எங்கள் அளவுக்குப் பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது.
ஜாதி என்பது தமிழ்ச் சொல் அல்ல. தமிழர்களிடையே ஜாதி என்பது கிடையாது என்று சொன்னவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் கருத்துகளைத் தொகுத்த ஒரு பேராசிரியர் ஒருவர் ஜாதி என்று வருகிற இடங்களிலெல்லாம் சாதி என்றே தொகுத்துள்ளார். இது எவ்வளவு பெரிய ஆபத்து! தந்தை பெரியார் கருத்துகளைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளையே தலைகீழாகப் புரட்டும் தன்மைதானே இது.
தொகுத்த பேராசிரியருக்குக் கெட்ட நோக்கம் இருக்க நியாயமில்லை என்றாலும், தனித்தமிழ் என்று ஜவுக்குப் பதில் ச போட்டதால், புரட்சியாளர் பெரியாரின் கருத்தே மாறிவிடுகிறதே!
பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு - அதன் தலைவர் தலைமையின்கீழ்தான் கருத்துச் சேதாரமின்றி வெளியிட முடியும் என்பது கல்லுப் போன்ற உறுதியாகும்.
எந்தப் பிரச்சினைகளையும் ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது; பல கோணங்களிலும் பார்ப்பதுதான் பகுத்தறிவு!
என்ன புரிகிறதா?

http://files.periyar.org.in/viduthalai/20080825/news21.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam