முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பகுத்தறிவு குறும்படத் திருவிழா - டிச 25

விடுமுறை நாளில் குடும்பத்துடன் குதூகலிக்க... நாள் முழுக்க பகுத்தறிவு குறும்படத் திருவிழா பெரியார் திரை குறும்படப் போட்டி -2009 டிசம்பர் 25 - காலை 10 மணி முதல் திரையிடல் தொடர்ந்து நடைபெறும்! 5 பிரிவுகள் 50 குறும்படங்கள் காலை 10 மணி முதல் திரையிடல் தொடர்ந்து நடைபெறும்! பங்கேற்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி இயக்குநர் ஜனநாதன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கவிஞர் கலி. பூங்குன்றன் அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்!!

17-ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

17- ஆம் தேதி எங்கே இருக்கீங்க? எங்கே இருந்தாலும் அவசியம் வர மறந்துடாதீங்க? என்ன விசயமா? அட, நான் இயக்கிய 'திற' குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நடக்குதுங்க! 'திற' (குறும்படம்) - - மதவெறி குடித்த ரத்தத்தின் ஒரு துளி - - திரையிடல் . திறனாய்வு ------------------------------ ------------------------------ ------------------------------ ---------- 17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 ------------------------------ ------------------------------ ------------------------------ ---------- தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி மதவெறிக்கு எதிரான குரல்கள் கவிஞர் கலி.பூங்குன்றன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'நக்கீரன்' கோபால் 'திரைப்பட இயக்குநர்' எஸ்.பி.ஜனநாதன் வழக்கறிஞர் அ.அருள்மொழி 'நிழல்' திருநாவுக்கரசு 'தலித் முரசு' புனித பாண்டியன் பேராசிரியர் ஹாஜா கனி பேராசிரியர் ரவிராஜ் 'திரைப்பட இயக்குநர்' சே.பாத்திமா பீவி ------------------------------ ------------------------------ --------

கடவுள்.. நடிகைகள்.. தினமலர்.. பொதுப்புத்தி.. கமல்ஹாசன்..

க டவுள் வேடமேற்று நடிப்பதற்கு ஒழுக்கமான நடிகைகளைத்தான் அழைத்து வரவேண்டுமாம். நிஜ வாழ்க்கையில் தப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும் நடிகைகளை சாமி வேஷங்களில் நடிக்க வைக்கக்கூடாது என்று வழக்குப் போடப் போகிறாராம் ஒருவர். அவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ, இந்துமதத்தைச் சேர்ந்தவரோ அல்ல, தனது நாட்டின் சகோதர மதமான இந்துமதம் இழிவுபடுவதாக வருத்தப்பட்டு பாரம் சுமந்திருப்பவர் சவுதி அரேபியாவில் தொழில் நடத்திவரும் மஸ்தான் என்ற தமிழ்நாட்டு இஸ்லாமியர் என்று பெருமை பொங்க செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். (நக்கீரன் 17.10.09). மஸ்தான் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவரது நண்பர் அந்த தொலைக்காட்சியில் அம்மன் வேடமேற்றிருந்த நடிகையைக் காட்டி இது என்ன வேடம்? என்றாராம். கடவுள் வேடம் என்றதும். அதற்கு நல்ல ஒழுக்க மான பெண்களே கிடையாதா? இந்த நடிகை இநதியாவில் என்னோடு கம்பெனி(?) கொடுத்தவர் என்றாரம் தொழிலதிபரான நண்பர். அந்த இழிவைப் பொறுக்க முடியாமல் தான் வழக்குப் போடப் போகிறாராம். இதுதான் சாக்கென்று இந்து முன்னணி வகையராக்களும் பேட்டி கொடுக்கிறதுகள். சரி, நடிகைகள் ஒழுக்கமானவர்களா? ஒழுக்கம

பெரியார் திரை குறும்படப் போட்டி 2009

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டி க்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு: ரூ.10000/- இரண்டாம் பரிசு: ரூ.5000/- மூன்றாம் பரிசு: ரூ.3000/- போட்டிக்கான விதிமுறைகள்: 1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும். 2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(Subtitles) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். 3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இ

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம்

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம் நாள்: 27.11.2009 இரவு 7 மணி. இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: கா.எழிலரசன் தலைமை: கு.வெ.கி. ஆசான் , நெறியாளர், பெரியார் களம், முன்னிலை: இறைவி, தலைவர், பெரியார் களம்; ஆடிட்டர் ஜெயராமன் , செயலாளர், பெரியார் களம், வீரவணக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் வழக்கறிஞர் அ. அருள்மொழி, பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம் கோ. கருணாநிதி, பொதுச்செயலாளர், AIOBC நன்றியுரை: பாரி

தலைவர் பிரபாகரனுக்கு தலைவர் கலைஞர் வாழ்த்து!

தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்கும் மாவீரர் நாளுக்கும் சேர்த்து தலைவர் கலைஞர் விடுத்துள்ள நம்பிக்கை வாழ்த்து! தலைவர் கலைஞர் இன்று முரசொலியில் எழுதியுள்ள கடிதத்திலிருந்து: "இரண்டாவது முறையாக முரசொலியில் வெளிவந்து கொண்டிருந்த "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' வரலாற்று ஓவியம்; முடிவுற்றுவிட்டது. எத்தனை முறை அந்த வீரனின் வரலாறு வெளிவரினும்; அந்த வீரகாவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். 1991-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப் பட்டதும், நான் எழுதிய வரலாற்றுப் புதினமுமான "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன். துரோகிகளை சந்திக்க நேர்ந்த தூயவன்... துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழ

வடக்கின் வசந்தத்தில் வீரமணியா?

ஸ்ரீலங்கா அரசின் கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பிறகு உலகை ஏமாற்றவும், மீள்கட்டமைப்புப் பணி லாபத்தில் உலகிற்கு பங்கு கொடுக்கவும், உருவாக்கப்பட்டுள்ள வடக்கின் வசந்தம் திட்டத்தை தொடக்கம் முதலே திராவிடர் கழகம் எதிர்த்து வந்திருக்கிறது. போராளிகளுக்கான களமாக, பாசறையாக காடுகள் இருப்பதால் அவற்றையும் அழிக்கும் பணியில் ஈடுபடவுமே இந்தத் திட்டம் என்பதையும் தோலுரித்துவருகிறது. இந்நிலையில், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், தனது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஒப்பந்தம் போட்டுள்ள எண்ணற்ற நிறுவனங்களில் ஒன்றான CIDC -யும், வடக்கின் வசந்தம் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது என்ற செய்தி வெளியானது. எந்தக் காலத்திலும் தமிழர்களின் நலனுக்கு எதிரான எதனையும் எதிர்க்கத் தயங்காதது திராவிடர் கழகமும், அதன் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்களும் ஆவார்கள். ஆனால் எதை வைத்து இவரை குறை சொல்ல முடியும் என்ற கண்கொண்டு அலையும் கும்பலுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லையே... இதோ கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி "விடுதலை" ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழர் தலைவர் கி.வீரமணி. குதர்க்கம் மட்டுமே நோக்கமாகக் கொண

இனப்படுகொலையைக் கண்காணிக்க வாக்களியுங்கள்!

கூகிள் நிறுவனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள Project 10 100 திட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 திட்டங்களுள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் 5 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தவுள்ளது. இந்த 16 திட்டங்களுள் இனப்படுகொலையைக் கண்காணித்தல் மற்றும் எச்சரித்தல் திட்டத்திற்கு அதிகப் படியான வாக்களிப்பதன் மூலம் இத்திட்டத்தை முதன்மைப் பட்டியலில் இடம்பெறச்செய்து, இதன் வாயிலாகவும் உலகின் கவனத்தைப் பெறமுடியும். எனவே, தோழர்கள் இத்திட்டம் குறித்து அறிந்துகொண்டு வாக்களிக்க வேண்டுகிறேன். திட்டம் பற்றி: http://www.project10tothe100.com/index.html இவ்விணைப்பில் உள்ள கீழ்க்காணும் பிரிவுக்கு வாக்களிக்கவேண்டும். இத்திட்டம் மேல், கீழாக எங்கும் இருக்கலாம். ஏனெனில் திட்டங்களின் வரிசை, மாறி மாறி வருவது போல் random-ஆக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கவனத்தோடு வாக்களிக்கவும். அல்லது, நான் வழங்கியிருக்கும் "Vote for this Idea" எனும் இணைப்பில் வாக்களிக்கவும். திட்ட எண்: 14 Create genocide monitoring and alert system Vote for this idea Community Build and refine tools capable of disseminating geno

இன்றும் பொருந்தும் திலீபனின் குரல்!

தமிழர் தாயகத்துக்கான வீரஞ்செறிந்த போராட்டத்தின் இன்னொரு வடிவம் தான் திலீபன்! ஆயுதம் தூக்காத வீரம்! அஹிம்சை, அஹிம்சை என்று வாய் கிழியக் கத்தும் இந்திய அரசுக்கெதிரான அறவழிப்போராட்டம்...! காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் வென்றது! திலீபனது போராட்டம் அவன் உயிரைக் குடித்தது!! காரணம் காந்தி போராடியது ஆங்கிலேயர்களை எதிர்த்து...! திலீபனின் போராட்டமோ பாழும் இந்தியத்தை எதிர்த்து! நியாயமான எதிரியுடன் தான் நியாயமாகப் போராட வேண்டும்! அதைக் கற்றுக் கொடுத்தது திலீபனின் வீரச் சாவு! தியாகத் திருவுரு திலீபனின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட ஆவனப்படம் காணக்கிடைத்தது. (நன்றி: வளரி.) அதில் திலீபன் ஆற்றும் உரை 22 ஆண்டுகள் கழித்தும், நமது இன்றைய சூழலுக்கு அவா ஆற்றிய உரை என்று கூறத்தக்க அளவில் பொருந்திப் போகிறது. "இனியும் ஆயுதம் எடுப்போம்... அந்நிலை வரும். எம் தேச விடுதலைக்காக எந்த தியாகத்தையும் செய்வோம்" என்றொலிக்கும் அந்தக் குரல் மீண்டும் மீண்டும் நாம் கேட்டு மனதில், புத்தியில், உணர்வில் பதிய வைக்க வேண்டிய குரலாகும். நீங்களும் கேளுங்கள்! திலீபனின் தியாகம்

செருப்பாலடித்தவரின் சிறப்புக் கட்டுரை

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது . அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. … முன்தாஜர் அல் ஜெய்தி நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்பு

ஜாதி ஒழிப்பு மாநாடு! புதுவண்ணை அழைக்கிறது - புது வரலாறு படைக்க!!

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடக்கிறது - "ஜாதிப்பாகுபாட்டை ஒழிப்போம்" என்னும் தலைப்பில்! எண்ணற்ற இருபால் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். உணர்வு பொங்கப் பேசுகிறார்கள். தலைப்பில் கவனம் - ஜாதிப்பாகுபாடு தான் ஒழிய வேண்டும்; ஜாதி அல்ல. கை, கால்களை ஆட்டி, ஆட்டி, ஒரு திறமையான வணிகப் பேச்சாளரின் பாவனைகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறது அவர்களின் உடல்மொழி! ஆனால் கருத்து? (படம் நன்றி: மதிமாறன்) "பாரதி பாடினானே, 'ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று இப்படித் தொடங்குகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான். பெண்ணுரிமையோ, ஜாதி ஒழிப்போ அவர்கள் பாரதியில் தொடங்கி பாரதியோடு முடித்துக் கொள்வார்கள். தாண்டி வரமாட்டார்கள். அதை விடுவோம். (பாரதியும் முழுமையான ஜாதி ஒழிப்புப் பேசியிருந்தால்.... நமக்கு அதில் ஒன்றும் சங்கடமில்லை. அரைகுறைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அரைகுறைதானே!) நான்கைந்து பாடல் வரிகளை எடுத்துவிடுவார்கள். கடைசியில் தீர்வு வைப்பார்கள்! "பள்ளிகளில் சேர்க்கும் போதே ஜாதியைக் கேட்கிறார்களே, இந்நிலை ஒழியும்வரை ஜாதி எப்படி ஒழியும்