தினசரி ஒரு பதிவு போட வேண்டும் என்பதற்காக மீள்பதிவு போடும் பழக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது. இதுவரையிலும் ஒன்றோ இரண்டோ மீள்பதிவாகியிருக்கலாம்..
சரி.. இப்போதெதற்கு அதெல்லாம்? மீள்பதிவு போடப் போகிறாயா என்கிறீர்களா? ஆம். அதே தான்.
ஆனால், மீள் பதிவாக அல்ல. மீள் நினைவாக!
மெல்ல மெல்ல பருவம் மாறத் தொடங்கி மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அதற்குப் பயந்து வெளியில் போகாமலா இருகக் முடிகிறது. போய்த்தான் ஆக வேண்டும். அப்படி போனபோது இரண்டு மீள் நினைவுகள்.
ஒன்று பின்னால் வருபவருக்கு பூமாரி பொழிவது போல் சகதியை அள்ளி வீசி வரும் இரு சக்கர வாகனங்கள் பற்றியது.
கொஞ்சமும் கவலை இல்லாமல் குட்டியூண்டு Mud guard வைத்துக் கொண்டு, பூவாளியில் தெளிப்பதுபோல் சாலையில் ஓடும் மழை நீரை, கழிவு நீரை, சகதியை என்று சகலத்தையும் வாரி இறைக்கிறார்கள் வாகன ஓட்டிகள். Mud guard-க்குக் கீழ் சாணிமேட் மாட்ட வேண்டுமென்று நம்மவர்களுக்கும் தோன்றுவதில்லை; வண்டிகளிலும் அதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து அனைவரும், உள்ளாட்சி, போக்குவரத்து நிர்வாகங்களும் கொஞ்சம் சிந்தித்தால் நல்லது.
இரண்டாவது, விழுப்புண்கள் பற்றியது. காரணமில்லாமலா...?
மழையில் அடித்த சடன் பிரேக்கில் பின் சக்கரம் இழுத்து கீழே விழுந்ததில் எனக்கும் தோழர் பாபுவுக்கும் மீசையில் மண் ஒட்டவில்லை ஆனாலும், இடது முழங்கையில் சிறிய சிராய்ப்புகள்... சிறிது தான். ரொம்பச் சிறிதுதான்..
இருந்தாலும் விழுப்புண்கள் வரிசையில் அண்மையில் மூன்று புதுவரவுகள்..
கடந்தமாதம் அடி-தடி-கடியில் ஒன்று!
நேற்று முன்தினம் கபடியில் ஒன்று!
நேற்று வண்டி சறுக்கியதில் ஒன்று!
இப்படி கணக்குப் போட்டதில் இன்னும் 33 பாக்கியிருக்கிறது. எதுவா? மேலும் விவரங்களுக்கு இந்தப் பதிவுக்கு செல்லவும்.
எச்சரிக்கை:
இந்தப் பதிவும், நினைவூட்டலும் கூட கண்டுகொள்ளப்படாவிட்டால், மீண்டும் ஒருமுறை மீள் நினைவுப் பதிவு போட வேண்டியிருக்கும். ஒழுங்கு மரியாதையாக ஆளாளுக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விடுங்கள். :)
சரி.. இப்போதெதற்கு அதெல்லாம்? மீள்பதிவு போடப் போகிறாயா என்கிறீர்களா? ஆம். அதே தான்.
ஆனால், மீள் பதிவாக அல்ல. மீள் நினைவாக!
மெல்ல மெல்ல பருவம் மாறத் தொடங்கி மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அதற்குப் பயந்து வெளியில் போகாமலா இருகக் முடிகிறது. போய்த்தான் ஆக வேண்டும். அப்படி போனபோது இரண்டு மீள் நினைவுகள்.
ஒன்று பின்னால் வருபவருக்கு பூமாரி பொழிவது போல் சகதியை அள்ளி வீசி வரும் இரு சக்கர வாகனங்கள் பற்றியது.
கொஞ்சமும் கவலை இல்லாமல் குட்டியூண்டு Mud guard வைத்துக் கொண்டு, பூவாளியில் தெளிப்பதுபோல் சாலையில் ஓடும் மழை நீரை, கழிவு நீரை, சகதியை என்று சகலத்தையும் வாரி இறைக்கிறார்கள் வாகன ஓட்டிகள். Mud guard-க்குக் கீழ் சாணிமேட் மாட்ட வேண்டுமென்று நம்மவர்களுக்கும் தோன்றுவதில்லை; வண்டிகளிலும் அதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து அனைவரும், உள்ளாட்சி, போக்குவரத்து நிர்வாகங்களும் கொஞ்சம் சிந்தித்தால் நல்லது.
இரண்டாவது, விழுப்புண்கள் பற்றியது. காரணமில்லாமலா...?
மழையில் அடித்த சடன் பிரேக்கில் பின் சக்கரம் இழுத்து கீழே விழுந்ததில் எனக்கும் தோழர் பாபுவுக்கும் மீசையில் மண் ஒட்டவில்லை ஆனாலும், இடது முழங்கையில் சிறிய சிராய்ப்புகள்... சிறிது தான். ரொம்பச் சிறிதுதான்..
இருந்தாலும் விழுப்புண்கள் வரிசையில் அண்மையில் மூன்று புதுவரவுகள்..
கடந்தமாதம் அடி-தடி-கடியில் ஒன்று!
நேற்று முன்தினம் கபடியில் ஒன்று!
நேற்று வண்டி சறுக்கியதில் ஒன்று!
இப்படி கணக்குப் போட்டதில் இன்னும் 33 பாக்கியிருக்கிறது. எதுவா? மேலும் விவரங்களுக்கு இந்தப் பதிவுக்கு செல்லவும்.
எச்சரிக்கை:
இந்தப் பதிவும், நினைவூட்டலும் கூட கண்டுகொள்ளப்படாவிட்டால், மீண்டும் ஒருமுறை மீள் நினைவுப் பதிவு போட வேண்டியிருக்கும். ஒழுங்கு மரியாதையாக ஆளாளுக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விடுங்கள். :)
கருத்துகள்
காத்து, கருப்பு உன் மேல பட்டிருச்சுன்னு நினைக்கிறேன்..!
கருப்பணசாமியை நினைச்சு கறுப்புக் கயிறை வாங்கிக் கைல கட்டிக்க..!
அப்புறம் இந்த அடிதடி, வம்புதும்பு, வாய்பேச்சு, வாள்வீச்சு இதுக்கெல்லாம் முன்னாடி போய் நிக்காத..! சூதானமா ஒரு ஓரமா போய் உக்காந்து சண்டைன்னா எந்திரிச்சு ஒரே ஓட்டமா திரும்பிப் பார்க்காம வந்திரு..!
சடுகுடுவெல்லாம் விளையாண்டா கைல, கால்ல அடிபடத்தான் ராசா செய்யும்..! நீ ஏன் அதெல்லாம் விளையாடுற..?
கோல்ப் கிளப் போ.. அந்த விளையாட்டைக் கத்துக்க.. திரும்பி வெளில வரும்போது நீ ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இருப்ப..!