முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்!

எவன் சொன்னான் தமிழீழம் மண்ணில் புதைந்ததென? மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டதென? துயிலும் இல்லங்களைத் துடைத்தெறிந்தோம்.. துகிலுரிக்கப்பட்ட உன் தமிழச்சி போலென‌ கொக்கரிக்கட்டும் சிங்களம் செருக்குடன்! கல்லறைகளில் மட்டுமா வீரர்கள் உறைந்தனர்! தமிழீழ மண்ணெங்கும் காற்றாய் நிறைந்தனர்! இன்று அவ்வில்லங்கள் இணையத்தில்.. என்றும் அவ்வில்லங்கள் இதயத்தில்...! புரட்டிப் போடட்டும் வீரம் விதைத்த மண்ணை! வரலாறு மறக்காது விதைகளின் எண்ணை! போயிற்று களம் என‌ அழுவது வீணடா! ஒரு போகம் விளைந்ததும் உழுவது ஏனடா? உனக்குமா தெரியாது உழவின் அரிச்சுவடி? நல்லேரைக் கொண்டுழுது அடிமண்ணை மேலெழுப்பி சத்தாக்குவோம்! நெல் வேரை உரமாக்கி விளைச்சலுக்கு அதனையே சொத்தாக்குவோம்! அன்று நாம் விதைத்தோம்! அவன் அறுத்தான்!! முதல் போகம் முடிந்தது! இன்று.. அறுத்தவன் உழுகிறான் இனி... நாம் விதைப்போம்.. நாம் அறுப்போம்! விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்! உறுதியாய் நம் தமிழர் தமிழீழம் காணுவர்!

குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிப்பேன் - மத்திய அமைச்சர் ஆ.இராசா

சென்னை, நவ. 14- தொலைத் தொடர்புத் துறையில் மாறுதலை விரும்பாதவர்கள் ஒன்று சேர்ந்து என்மீது களங்கம் கற்பிக்க முனைந் துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஆ. இராசா இந்து நாளித ழுக்கு அளித்த பேட் டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: கேள்வி:  2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, புதிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கியது, உரிம நிபந்தனைகளில் மாற்றம் செய்தது ஆகியவை காரணமாக அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய உயர் தணிக்கை அதிகாரியின், தணிக்கை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது என்ற செய்தி கசிந்திருக்கிறது. இதனைப் பற்றி நீங்கள் விளக்கமுடியுமா? ஆ.இராசா : எழுப் பப்பட்டுள்ள பிரச் சினைகளை இரு வகை களாகப் பிரிக்கலாம். முதலாவது, அரசாங் கத்துக்கு இழப்பு ஏற் பட்டதாகக் கூறப்படு வது. அடுத்தது நடை முறையில் தவறுகள் ஏற்பட்டது என்று கூறப்படுவது. 1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை மத்திய அமைச்சரவை யால் ஏற்றுக் கொள் ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடா ளுமன்றம் பின்னேற்பு வழங்கப்பட்டு உள் ளது. ஏலம் வழியான நடை முறையிலிருந்து(NTP 94) வருவாய் பங் கீடு நடைமுறைக்கு (NTP 99) மாறுவதற்கு இந்த