முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’தமுக்கு’ வீரமணி: ஆசிரியரின் அறிக்கையும், அலர்ஜிக்காரர்களின் அரிப்பும்!


தமுக்கு வீரமணி என்று பட்டம் தருகிறார்களாம்! அதற்கு ஆதரவு தந்து கை தூக்குகின்றனராம் அலர்ஜிக்காரர்கள்! http://www.facebook.com/photo.php?fbid=166589886723898&set=a.132067643509456.20892.100001186622923&comments

தமுக்கு எங்கள் ஒடுக்கப்பட்டோரின் இசைக்கருவி தான்! அதைச் சுமப்பதிலும் அடிப்பதிலும், அதன் மூலம் அடைமொழிபெயர் பெறுவதிலும் கூட எங்களுக்கு ஒன்றும் மனஒதுக்கீடு இல்லை! இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயருக்கு ஒரு பொருத்தமும், கூடவே வரலாறும் உண்டு!

”1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உத்தரப்பிர தேச அரசு சார்பில் மூன்று நாள்கள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தனர். இதனைப் பொறுக்க மாட்டாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திராசாமி பின்னணியில் பிள்ளையார் பால் குடித்ததாக இந்தியா முழுமையும் பரப்பினர். இது புரட்டு என்பது நிரூபிக்கப்பட்டது பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அன்றைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில் தமுக்கு (டாம்டாம்) அடித்துப் பிரச்சாரம் செய்தார்" என்பது வரலாறு.

அதனால் பகுத்தறிவைப் பரப்பவும், இனத்தின் நலனுக்காகவும் தமுக்கடிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை! ஜால்ரா அடிக்கிறார்; பூசாரி வேலை செய்கிறார்; ராஜகுருவாக இருக்கிறார்; மேலவைக்குப் போகிறார்; பொம்மை முதலமைச்சராகிறார்... இன்னும் என்னென்ன அரிப்போ அவ்வளவையும் தினமலம் உள்ளிட்ட பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதி சொறிந்து கொண்டிருந்தன. இப்போது அந்தப் பணியில் தினமலத்தின் புதல்வர்கள் நாங்கள் என்று புறப்பட்டிருப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது கிடக்கட்டும். 

தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் என்ன செய்வது என்ற கவலை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, அரைவேக்காடுகளுக்கு நிறையவே இருக்கிறது. காரணம் இவர்களின் நோக்கம் காங்கிரசை வெறுப்பதும் இல்லை; வேரறுப்பதும் இல்லை. திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும், அதற்கெதிராக செயல்படுவதும்தானே!

அதை விட முக்கியமாக ”எங்கே காங்கிரஸ் விலகி, அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் நம்ம பொழப்பு என்னாவது” என்கிற ரீதியில், மூணு சீட்டு பாண்டியன் கட்சிக்கும், Y, U நாம ’மார்க்’சீட்டுகளுக்கும் கலக்கம் உண்டாகியிருப்பது தெரிகிறது. வை.கோவுக்கு அந்தச் சிக்கல் இல்லை. எங்கிருந்தாலும் ஜெயிக்கப்போவதில்லை; மொத்தமே ரெண்டு பேர் தான் என்பதால், கூட இருப்பவர்களுக்கு சீட்டு வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்ற கவலையும் இல்லை.

ஆசிரியர் விடுத்த அறிக்கை காரணமாக, நிறைய பேருக்கு அரிக்க ஆரம்பித்திருக்கிறது.

அலர்ஜிக்காரர்கள் அரித்துக் கொண்டிருக்கட்டும்! நாங்கள் தமுக்கு அடித்துக் கொண்டிருக்கிறோம்.


பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிடப்பட்ட புரளியை எதிர்த்து
தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்த தமிழர் தலைவர் கி.வீரமணி (செப்டம்பர் 25, 1995)

கருத்துகள்

அ.முத்து பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
காதுகள் குறைவாக இருக்கும் நம் சமூகத்தில் தமுக்கின் ஒலி ஆதிக்க எண்ணவாதிகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில என்ன ஆச்சர்யம்!... தமுக்கின் ஒலியில் கிழக்கு ஆறாம் முறை மீண்டும் உதிக்கும்!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam