முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாசு அகற்றிய மாசு!


இந்தக் கட்டுரையை நான் எழுதத்தொடங்குகிற இந்த நொடியோ (11:59:14 - 20.10.2011), அல்லது எழுதத் தோன்றிய 16-ஆம் தேதி இரவோ எந்த விதத்திலும், பிரச்சாரத்திற்கோ ஒரு ஓட்டிற்கோ கூடப் பயன்படப் போவதில்லை; அந்த நோக்கமும் இல்லை.

ஏன், எழுதும் நான், என் ஓட்டைக் கூடத் தர முடியாதவன்... சென்னை மாநகராட்சிக்கு! (காரைக்குடிக்குச் சென்று 19-ஆம் தேதி வாக்கிட்டுவிட்டு வந்துவிட்டேன்) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்பையும் தாண்டி, மக்களின் ஆதரவு என்னும் பேரலை இவருக்குச் சாதகமாக இருப்பினும், சென்னை மாநகராட்சியை எப்பாடுபட்டேனும் கைப்பற்றியே தீருவது என்ற வெறியில், இவரது வெற்றி ஆளுங்கட்சியினரால் தட்டிப் பறிக்கப்படலாம். ஆனாலும் என் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது.

நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல், மாநகராட்சி உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 2006-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அப்படி சென்னை சைதையிலிருந்து தி.மு.க.வின் சார்பில் மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, பின்னர் மாநகரத் தந்தை ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மா.சு என்கிற மா.சுப்பிரமணியன்.

சென்னையின் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாயிருந்த தளபதி மு.க. ஸ்டாலினின் காலத்திற்குப் பிறகு (1996-2001), மீண்டும் அவரே மாநகராட்சிக்கு 2001-இல் வென்ற நிலையில், அன்றைக்கு ஆட்சியில் அமர்ந்த ஜெ-யும் அவரது அடியாளாக காங்கிரசிலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்திருந்த கராத்தே தியாகராஜன் போன்றோரும் கொடுத்த குடைச்சல், துணை மேயர் என்னும் பெயரில் அடித்த கூத்து, பின்னர் கராத்தேவைப் போட்டுத் தள்ளத் தயாரான முதல்வர் ஜெ-யின் செயலால் அவர் தப்பியோடி வடநாட்டில் மறைந்த மர்மம் என சீர்கெட்டுப் போயிருந்த சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டிய மாபெரும் பணியைத் திறம்பட செய்து முடித்தவர் மா.சுப்பிரமணியன்.

பெரியார் கொள்கைப் பற்று, திராவிட இயக்கச் சிந்தனை, கலைஞரின் மீதான பாசம் என பக்கா தி.மு.க.காரர்! சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியும் தி.மு.க. காலத்தில் மட்டுமே செய்யப்பட்டது என உறுதியாகச் சொல்ல முடியும். அதனாலேயே தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் சென்னையை இன்னும் சிறப்பாக நிர்வகித்த பெருமையும் மா.சு அவர்களுக்கு உண்டு. எளிமை, பழகுதற்கு இனிமை, மக்கள் எவரும் சென்று சந்திக்கும் அளவு இயல்பான பண்பு இவருடையது.

ஜீ தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில், தொலைபேசியில் குறை தீர்க்கும் நிகழ்ச்சிக்காக நேயர்கள் உரையாடும் போது, தெருப் பெயரைச் சொன்னவுடனேயே, அங்கே என்ன பிரச்சினை? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எப்போது சரியாகும்? என பதில் சொல்லி நிகழ்ச்சித் தொகுப்பாளரையே வியக்க வைக்கும் அளவு சென்னையின் நீள அகலங்களைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தவர்.

கூவம் கால்வாய்ச் சீரமைப்புத் திட்டம், சென்னையெங்கும் பூங்காக்கள், போக்குவரத்தைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கன. ஆனால், அவற்றையெல்லாம் விட என்னை ஈர்த்தவை சில.

தனியார் பள்ளிகள் தான் தரத்தில் சிறந்தவை என்ற மாயையை அகற்றி, சென்னை மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறமுடியும்; முதலிடத்தைப் பிடிக்க முடியும் என்னும் அளவிற்கு பள்ளிகளின் தரத்தைத் தூக்கிப் பிடித்தது முக்கியமானது. 

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் தங்க மோதிரம் அணிவித்து அவர்களை ஊக்கப்படுத்தியது இன்னொன்று. ’நல்ல தமிழ்ப்பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்’ என்று சொல்லுவதோடு அல்லாமல் அதற்கொரு பரிசும் கொடுத்து அதற்கொரு பயனையும் தந்தது அத்திட்டம்.

சென்னை சாலைகளின் இரு பக்கச்சுவர்களிலும் தமிழர் தம் பண்பாட்டையும், வரலாற்றையும் பறைசாற்றும் வண்ணம், இயற்கைக் காட்சிகளும், தமிழகத்தின் வளங்களும் தலைநகருக்குப் பெயர்ந்துவிட்டதோ என்று வியக்கும் வண்ணம் வண்ண ஓவியங்களை மிளிரச் செய்து, வழமையான அலுத்துப் போன சென்னை வாழ்க்கையில் இருந்து சென்னை மக்களுக்கே புத்துணர்வான மனமாற்றத்தைத் தந்தவர் மா.சு! (பெங்களூருவில் இருந்ததைப் போலத் தான் இந்தத்திட்டம் பின்பற்றப்பட்டது என்றாலும், அங்கிருந்த மொக்கையான ஓவியங்களை ஒப்பிடுகையில் அழகுணர்ச்சியோடு அதைச் செய்தவர் நமது மேயர் என்று பெருமையாய்ச் சொல்லாம்.




இன்னும் தலையாய ஒன்றுண்டு.


”வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ?



உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்குஷாப்' எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை!” 


என்றெழுதிய புரட்சிக் கவிஞர் போல், ’தமிழ் இருக்காதா எம் தலைநகர்த் தெருவினில்’ என்று வருந்திக் கொண்டிருந்த வேளையில், விதிமுறையை நெருக்கி, ”ஆக்ஸ்போர்டு பிரஸ்’ என்றாலும் தமிழில் எழுது” என்று பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து, பாதையோரக் கடை வரைக்கும் தமிழில் பெயர்ப்பலகை எழுத வேண்டும் என்பதை நடைமுறைக்குக் கொண்டுவந்து வெற்றிகண்ட பெருமை சர்வ சந்தேகமில்லாமல் மா.சுப்பிரமணியன் அவர்களைத் தான் சாரும். 


”தமிழை எங்கே தேடுவேன்?” என்று பாடல்கூட வெளிவந்து இணையதளங்களில் உலவியது. 

ஆனால், ஆங்கில எழுத்துகளை தமிழில் மாற்றி Transliteration செய்தால் மட்டும் போதாது. நல்ல தமிழில் மொழியாக்கம் செய்து ‘இனிப்பகம்’, ‘வெதுப்பகம்’, ’தொலை தொடர்பகம்’ என்று தமிழ் எழுத்துருவைக் கேள்விப்படாத பன்னாட்டு நிறுவனங்கள் கூட, அதிகம் அழகில்லாத ’ஒருங்குறி’ எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ்ப்பெயர்ப் பலகை வைக்க வேண்டிய அளவு நடைமுறையில் உறுதியாக இருந்து சாதித்தும் காட்டியது மனமுவந்து பாராட்டத்தக்கது. இன்னும் சில இடங்களில் அப்படித் தான் இருக்கிறது என்று குறைப்படவும் கூடும். மறுக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு வீதம் தவிர முழுமையான வெற்றி என்றே சொல்லவேண்டும். தமிழில் கட்டாயப்படுத்தி எழுதச் செய்தாலும், அழகைக் கெடுப்பதாகக் கருதி அதை வெறுப்போடு எழுதியவர்களே பின்னர் ரசிக்கும்படி இருந்த இன்பத்தைத் தந்தவர் நம் மா.சு அவர்கள்!


மதராஸ் என்றிருந்ததை மாற்றி ’சென்னை’ என்று சொல்ல வைத்த கலைஞரைப் போல, சென்னையின் தெருக்களில் தமிழ் கிடந்து தள்ளாடும் என்றிருந்த ’மாசு’ தனை அகற்றி தமிழ் செழிக்க வைத்த ’மா.சு’ அவர்களே, உங்களை நாளும் நன்றியோடு நினைவுகொள்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது இவரைப் பாராட்டி எழுத! (8 மணிக்காவது நான் பதிவை முடிக்க வேண்டாமா?)


இன்று வெளிவரும் முடிவுகள் எப்படியும் இருக்கலாம். சென்னை மக்கள் மட்டுமல்ல... உணர்வுள்ள தமிழர்கள் எங்கிருப்பினும் உம்மை நன்றியோடு நினைப்பார்கள்! சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உங்கள் பணி தேவைப்படுகிறது வாருங்கள்!


பின்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு இன்றியமையாத இன்னொரு பணியும் உண்டு... அதை வெற்றிபெறுபவரின் கவனத்துக்கு வைப்போம் - மாநகரைக் காக்க!

கருத்துகள்

SURYAJEEVA இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் சொல்லியது போல் ஒரு நாப்பது சதவிகிதம் நபர்கள் சென்னையில் அவரை ஆதரித்தாலே போதுமே, அவர் வென்று விடுவாரே... என்னை பொறுத்தவரை பாதாள சாக்கடை என்று கூறி ஓரமாய் ஓடிக் கொண்டிருந்த கால்வாய்களை நடு ரோட்டில் விட்ட பெருமை இந்த திட்டத்தை செயல்படுத்தியவர்களுக்கு உண்டு... ஒரு வார்ட் கவுன்சில்லோர் பதவிக்கு போட்டியிடுபவரே ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என்றால், எவ்வளவு தாங்க அவர் கொள்ளை அடிக்க போகிறார் என்ற சாதாரண கேள்வி என் மனதில் எழுகிறது..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam