...... 1949க்குப் பிறகு அய்யா அவர்கள் எனது இல்லத்தில் தான் தங்குவார்கள் (காரைக்குடி வரும்போது) என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும்.
ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள்.
நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார்.
வீட்டில் நுழைந்து, என் துணைவியார் மற்றும் நான்கு (அப்போது நான்கு குழந்தைகள்தான்) குழந்தைகளும் அனைவருமே தீபாவளி துக்க நாள் குறித்து கருப்பு உடை அணிந்திருந்ததைப் பார்த்த அய்யா அவர்கள் ”ரொம்ப சரி, ரொம்ப சரி” என்றுரைத்து ”அம்மா காப்பி போடுங்கள். சாப்பிட்டு செல்கிறேன்” என்றார்கள். கடையிலிருந்த என் மைத்துனனும் கருப்புச் சட்டையுடன் தானிருந்தார்.
(என் தாத்தா என்.ஆர்.சாமி அவர்கள், தன் வாழ்க்கைப் பாதையைத் தானே சொல்லும் பாங்கில் எழுதப்பட்ட ”காவனூர் முதல் காரைக்குடி வரை... வழி: மலேயா” என்ற கட்டுரையில், ”திடீரென வீட்டுக்கு வந்த பெரியார்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தி - காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர்.சாமி நூற்றாண்டு விழா மலரிலிருந்து...)
ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள்.
நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார்.
(படம்:பெரியார் நடந்து வந்த சந்தின் இன்றைய தோற்றம்)
(உள்படம்: என்.ஆர்.சாமியும், பேராண்டாள் அம்மையாரும், கையில் குழந்தையாக திராவிடச்செல்வம்)
|
நான் கருப்புச்சட்டையுடன் எதிரே வருகிறேன். சற்று தூங்கிவிட்டு வருவதால் எனக்கே ஒரு சந்தேகம். 'காண்பது கனவோ' என்ற நிலை.
"அய்யா வாங்க" என்றேன்.
அய்யாவும் "வாங்க வீட்டிற்குப் போகலாம்" என்று சொன்னபடியே வீடு நோக்கி நடந்தார். நானும் கூடவே பின் சென்றேன்.
வீட்டில் நுழைந்து, என் துணைவியார் மற்றும் நான்கு (அப்போது நான்கு குழந்தைகள்தான்) குழந்தைகளும் அனைவருமே தீபாவளி துக்க நாள் குறித்து கருப்பு உடை அணிந்திருந்ததைப் பார்த்த அய்யா அவர்கள் ”ரொம்ப சரி, ரொம்ப சரி” என்றுரைத்து ”அம்மா காப்பி போடுங்கள். சாப்பிட்டு செல்கிறேன்” என்றார்கள். கடையிலிருந்த என் மைத்துனனும் கருப்புச் சட்டையுடன் தானிருந்தார்.
(பின்னொரு நாள் எடுக்கப்பட்ட படம்: என்.ஆர்.சாமி அவர்களின் ஆறு செல்வங்கள் இடமிருந்து: திராவிடமணி, தமிழரசி, ஈவெரா மணியம்மை, திராவிடச்செல்வம்(கீழே), ஜனசக்தி, சமதர்மம்) |
எனது குடும்பம் கொள்கையில் பிடிப்புடனிருக்கிறார்களா என்று பார்த்து விட்டுப் போக வந்திருப்பார்கள் என்று எண்ணி மகிழ்ந்தோம்.
-----------------------------------------------------------------------------------------
(என் தாத்தா என்.ஆர்.சாமி அவர்கள், தன் வாழ்க்கைப் பாதையைத் தானே சொல்லும் பாங்கில் எழுதப்பட்ட ”காவனூர் முதல் காரைக்குடி வரை... வழி: மலேயா” என்ற கட்டுரையில், ”திடீரென வீட்டுக்கு வந்த பெரியார்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தி - காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர்.சாமி நூற்றாண்டு விழா மலரிலிருந்து...)
கருத்துகள்