முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகநூலில் ‘தேசீயவாதி’ ஆவது எப்படி?


தேவையான பொருட்கள்:

1. இந்திய தேசியக் கொடியின் படங்கள் சில.

2. கொடியின் வண்ணங்கள் கூடப் போதுமானது. அதிலும் குறிப்பாக ’வந்தே மாதரம்’ பாடல் டிசைனில் உள்ளது போன்ற நடுவில் அசோகச் சக்கரம் இல்லாத ஓவிய வடிவில் இருந்தால் இன்னும் உங்கள் தேசீய ‘கிரேடு’கூடும்!)


3. காந்தி, நேரு படம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப் பயன்படுத்தினால் காங்கிரஸ் சாயம் வந்துவிடும் ஆபத்து இருப்பதால், காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-சின் இன்றைய அடையாளமான மோடி படத்தைப் பயன்படுத்தலாம்.

4. அன்னா ஹசாரே, மதச்சார்பின்மையைக் காக்க அப்துல்கலாம் (வேறு எந்த முஸ்லிம் படமும் அனுமதியில்லை.)

5. ’பாரத் மாத்த்த்தா க்க்க்கீ ஜே!’, ’வந்த்த்தே மாத்த்தரம்’ போன்ற ரெடிமேட் ஸ்லோகங்கள் கொஞ்சம் போல வைத்துக் கொள்ளலாம்.


செய்முறை:
இந்தியாவின் இண்டிபெண்டன்ஸ் டே, ரிபப்ளிக் டே (எது ஜனவரி 26, எது ஆகஸ்ட் 15 என்றெல்லாம் தெரியவேண்டியதில்லை.) என்று யாராவது சொல்லும் போதெல்லாம் மேற்காணும் படங்களில் ஒன்றைப் profile படமாகப் போட்டுவிட்டு, forward mail எதாவதிலிருந்து எடுத்து ஸ்டேடஸ் மெசேஜ் போடலாம்..

கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்துவது தூக்கலாக இருக்கும்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது, துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாக்கள் போல அடிவயிற்றிலிருந்து வாய் வழியாக... (நோ..நோ) குரல் எழுப்ப வேண்டும். ’ஹாக்கி’ என்ற அஜய்தேவ்கனின் இந்திப்படம் பற்றிக்கவலையில்லை.

ஊழல் ஒழிய உண்ணாவிரதம் இருப்போம். கார்ப்பொரேட் கம்பெனிகளிடம் இருந்து ஸ்பான்சர் பெற்று மூன்றாம், நான்காம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பொம் என்று நெஞ்சில் குத்திவிடாதபடி, டி-சர்ட்டில் குத்திய நேஷனல் பிளாக் உடன் உதார் வுடலாம். அல்லது அப்படிப்பட்ட உதார்களுக்கு link கொடுக்கலாம்.

யூ டியூப் செய்முறைப்படி, காந்தி குல்லாய் போட்டு சேட்டு கணக்கா அலைவது கூடுதல் மணம் கொடுக்கும். http://www.youtube.com/watch?v=_RJv23_CVss

ஹிந்தி படிக்கவிடாததால் பெரிய நட்டம் என்று தமிழ்நாட்டில் குல்பி விற்கும் இந்திக்காரனிடம் குல்பி வாங்கிச் சப்பியபடி ‘ச்சே... நான்சென்ஸ் டமிலியன் லீடர்ஸ்’ சொல்லவேண்டும்.

காஷ்மீர் எல்லையில் குண்டூசி விழுந்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அல்லது ஐ.எஸ்.ஓ.. எதன் மீதாவது குற்றம் சொல்ல வேண்டும். காஷ்மீரில் சாகும் மக்கள் பற்றிய கவலை நமக்கு வேண்டியதில்லை.

(அப்படியென்றால், அஸ்ஸாம், மணிப்பூர், தண்டகாருண்யா, tamil fisherman...? )
”அதெல்லாம் இந்தியாவிலேயா இருக்கு?”

குஜராத்தின் சாதனை, மோடியின் அன்பான புன்னகை, அங்கங்கே Pribe to an indian.. சீ.. Proud to be an indian, My country, இந்தியாவை வல்லரசாக்க facebook-la இந்த மெசேஜை forward பண்ணுங்க போன்ற வாசகங்களை இடையிடையே போட்டுக்கலாம்..

தேசீயத்தின் பிராண்டு அம்பாசிடர்களான மணிரத்னம், ஷங்கர், அர்ஜூன் படங்களைக் கண்டு விரைப்புக் கொள்ள வேண்டும்,

இதெல்லாம் செஞ்சா... நீங்க அக்மார்க் ’இந்து’ய தேசீயவாதி ஆயிடலாம்...

முடிவுரை: அவ்வப்போது ஆங்கில ஊடகங்கள் பரிந்துரைக்கும் நிலைப்பாடுகளை மட்டுமே எடுத்துவருவதால், அவை கேபிளில் கட்டாகும் வரை... அல்லது இண்டர்நெட்டில் லைவ் போகும் வரை...

கருத்துகள்

SURYAJEEVA இவ்வாறு கூறியுள்ளார்…
உள்குத்து
ஊமை குத்து
செம குத்து

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam