முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே!

(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...)

ஆயிற்று பத்தாண்டுகள்
அருமைத் தோழர்களே!

நம்ப முடிகிறதா
நம்மால்?
2002
ஏப்ரல் 25!

கடைசி நாள்
மாணவர்களாய்
கண்கலங்க
விடைபெற்று
ஆயிற்று பத்தாண்டுகள்!


கல்லூரி கலங்க
ஆடி மகிழ்ந்த நாட்கள்
அடங்கி
ஆயிற்று பத்தாண்டுகள்!

அடிதடி...
கும்மாளம்...
ஆர்ப்பாட்டம்...
அந்யோந்நியம்...
அத்தனையும் முடிந்ததாய்
மனம் நொறுங்கி
ஆயிற்று பத்தாண்டுகள்!


பவநகர் ஸ்டேடியம்...
அழகப்பர் நினைவிடம்...
அஞ்சல் நிலையம்...
வாசல் பெட்டிக் கடை...
தைல மரங்கள்...
சைக்கிள் ஸ்டாண்ட்...
ஸ்டோர் நோட்புக்கு...
நூலகத்தின் பின்னோடும்
ரயில்வே சிக்குபுக்கு...
கேண்டீன் கணக்கு...
ஆங்காங்கே மரத்தடியில்
’கடலை’ ஆமணக்கு!
மர பெஞ்ச் ஓவியம்...
கரும்பலகைக் கவிதை...
அன்பு, நட்பு, காதலென்று
அவரவர் நினைப்புக்கேற்ப
அழியாத
ஒரு விதை!

டுர்டுர் வண்டியில
ரெண்டு வருசம் டூரு!
மலை மலையாய் ஏறி,
கடல் கடலா குளிச்சு,
அருவி அருவியா நனைஞ்சு,
விடிய விடிய முழிச்சு
சீட் இல்லாட்டி
சூட்கேஸு...
அதுவும் இல்லைன்னா
தரையிருக்கு
விடுங்க பாஸு!
உலகம் சுற்றிய
வாலிபர்களாய்
இரு
மூன்று நாட்களில்
நாடளந்தோம்!

என்.எஸ்.எஸ். பாலுத்தம்பி...
ஆஞ்சநேயரின் ‘(வெளிய) பெய்டு தம்பி’...
டி.எஸ்.பி.யின் பிஸினஸ் ஸ்டாட்...
மதியின் என்பீல்டு புல்லட்...
ராதாகிருஷ்ணன் கிளாஸ்...
ராஜா முகமது போஸ்...
அழகர்சாமி...
சின்னையா...
அடுத்தடுத்து கிளாஸுய்யா!

குட்டை காமராஜராய்
நிர்மலானந்தன்...
கொசு கவிராயர்...
கிளார்க் கான்...
நேபாளி பியூன்...
கணபதி இங்கிலீசு...
தமிழுக்கு
மீசை முருகேசு!

எல்.எஸ்
விட்டுக் கொடுத்து
யு.எஸ்.,
யு.சி.!
தேர்தல் சண்டை
பி.காம்-க்குள்ளேயே
கோர்ட்டு
கேசு!

எடுத்துச் சொல்ல
ஒன்றா...
இரண்டா...
மூன்று ஆண்டுகளில்
முழுதாய் வாழ்ந்தோம்!
பழையவற்றை
பழகியவற்றை
எங்கே
மறந்தோம்?

ஆயிற்று பத்தாண்டுகள்
அருமைத் தோழர்களே!

பத்தாண்டு என்ன?
பத்துப் பத்தாய்
நூறாண்டு கடந்தாலும்
நெஞ்சில் இது
பசு மரத்து ஆணி!
நினைவு நதியில்
பயணிக்கும் தோணி!
-------------------------------------------------------------------------
* எல்.எஸ் - Ladies Secretary; யு.எஸ் - Union Secretary; யு.சி - Union Chairman

பி.கு: 2012 ஏப்ரல் 25-ல் எழுதி கல்லூரி நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி அனுப்பிவிட்டேன். அன்று இரவு 1:30 மணிக்கும் முழுதாக படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த நண்பன் விஜய்க்கும், பெற்ற மின்னஞ்சலுக்கும், குறுந்தகவலுக்கும் பதில் தந்த  நண்பன் சண்முகநாதன் உள்ளிட்ட சொற்ப நண்பர்களுக்கும் நன்றி!

வலைப்பதிவில் நமக்கு இது 200-ஆவது பதிவு என்று எண்ணிக்கை காட்டியபோது, சரி கொஞ்சம் (என்) நினைவில் நிற்கும்படி பதிவு போட வேண்டும் என்று தான் இந்தப் பதிவு! சம்பிரதாயப்படி போடவேண்டிய 200 தொட்டதற்கான இணையத்தில் கடந்து வந்த காட்டாறுகள் தொடர்பான (!) சுயசொறிதல் அல்லது சுய(காரணப்)புராணப் பதிவு 250-ஆவது பதிவாக...!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam