முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னும் நீக்கப்படவில்லை அம்பேத்கர் கார்ட்டூன்!

பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, எப்போதோ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டிருந்த போக்கு அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.   

இதனை அடுத்து, அந்த படம் - பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையத்தில் இன்னும் அந்தப் படத்துடனே பாடம் வைக்கப்பட்டுள்ளது.

http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10
பார்க்க: பக்கம் 18


இந்த நேரத்தில் சமச்சீர் கல்வி விசயத்தில் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. 2011-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் அதிமுக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அன்று ஞாயிற்றுக் கிழமை - நான் சென்னையில் இல்லை. இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தால் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து வைக்கச் சொன்னேன். பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றை ஒரு தனியார் இலவச இடம் ஒன்றில் பதிவேற்றம்ச் செய்தும் வைத்துவிட்டோம்.

அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால், எப்படியும் அரசு அலுவலர்கள் மறுநாள் வந்து தான் அதை நீக்க முயல்வார்கள் என்று தெரியும். அதனால் தான் நம்பிக்கையோடு அந்தப் பணியைச் செய்தோம். அதன்படியே நடக்கவும் செய்தது. திங்கட்கிழமை பாடங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டன. பின் நாங்கள் பதிவேற்றியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு விளம்பரப்படுத்தத் தயாரானோம்.

அப்படி மறுநாளே, பாடங்களைத் தூக்கக் கூடிய அரசு இயந்திரம் தான் இன்னும் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூனை நீக்காமல் இருக்கிறது என்பதை வைத்தே யார் அதிகாரம் இன்னும் இங்கே நிலைபெற்றிருக்கிறது என்பதை அறியலாம். இதனை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய வகையில் கவனத்தைக் கொண்டு செலுத்த வேண்டும்.

நாமும் நமது கண்டனங்களை மின்னஞ்சல், இணையத்தின் வழி மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும்  NCERTக்கும் தெரிவிக்க வேண்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam