பார்ப்பனர்கள் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் போதெல்லாம் ’அவர்களும் தமிழர்கள் தானே! அவர்களுக்கும் மொழிப் பற்றெல்லாம் உண்டு’ என்று நம்மவர்களே திரண்டு வருவார்கள். அதிலும் அந்தப் பார்ப்பனரால் பலனோ, விளம்பரமோ கிடைக்கும் என்றால் இந்தக் குரல் இன்னும் வேகமாக எழும்புவதோடு, ”இன்னும் ஆரியர், திராவிடர், பார்ப்பனர் என்றெல்லாம் திட்டிக் கொண்டு...” என்று நம்மை ஏதோ பிற்போக்குவாதிகள் போலப் பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பகரவும் செய்வார்கள். ஏனெனில் அத்தகையோருக்குத் தான் விபீஷணப் பட்டமும், பார்ப்பனர்களின் விளம்பர சடகோபமும் கிடைக்கும்.
அண்மைக் காலமாக, பனியாவின் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக நுழைந்திருக்கும் பார்ப்பனர் ஒருவர் எங்கெங்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும், அங்கெல்லாம் விஜயம் செய்து வருகிறார். அந்த அச்சு அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான வைத்தியநாத அய்யர்வாளுக்கு, திடீரென தமிழ்ப் பற்று பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயமெங்கும் அதைப் பாய்ச்சுவதைக் கடமையாகக் கொண்டு செயலாற்றிவருகிறார். (அழைத்தால் வெளிநாடுகளுக்கும் அவாள் வரத் தயார். ’கடல் தாண்டக் கூடாது என்பதெல்லாம் பழைய கதைங்காணும்...’, ’அப்போ... அந்த அனைத்துச் சாதியினர் அர்ச்சகர்’ -’பேசப்பிடாது... அதெல்லாம் பெரியவா அந்தக் காலத்திலேயே வகுத்து வச்சது... நம்ம இஷ்டத்துக்கு மாத்திடமுடியாது’)
தமிழ் என்றாலே மொட்டைத் தலையில் மிளகாய் அரைத்தது போல் துள்ளும் துக்ளக்காரிடம் பயிற்சி பெற்று, அடுத்த தலைமுறை வந்துவிட்டது என்ற அவரது வாழ்த்துகளோடு, ஆழம் பார்த்து இறக்கிவிடப்பட்டிருக்கும் வைத்தியநாத அய்யருக்கு மட்டும் தமிழ்ப் பற்று எங்கிருந்து பிறக்கும்?
பிறகேன் அவர் தமிழ்ச் சங்கங்கள் அனைத்திற்கும் சென்று வருகிறார். விளம்பர வெளிச்சத்தைக் காட்டி அனைத்து சங்கங்களுக்கும் தனது ஆலோசனை என்ற பெயரில் நச்சை விதைக்கவும், தங்கள் ஆட்களை விதைக்கவும்.செய்யும் சூழ்ச்சியே இது என்பதை விடுதலை கொஞ்ச நாளுக்கும் முன்பு போட்டு உடைத்திருந்தது.
அதற்கெல்லாம் வேலை வேண்டாம். இதோ நான் இருக்கிறேன் என்று பூணூலைத் தூக்கிப் பிடித்தபடி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்வார் அவ்வப்போது! இப்போதும் அப்படித் தான்.
கம்யூனிசம், தமிழ்த் தேசியம் என அதீத முற்போக்கு பேசும் பார்ப்பனர்களுக்கான ஆசிட் டெஸ்ட் - சமூகநீதி!
அதேபோல் தீவிர தமிழ் ஆதரவு பேசும் பார்ப்பனர்களுக்கான ஆசிட் டெஸ்ட் - அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் என்பதும், கோவில்களில் தமிழ் என்பதும்!
அய்யர்வாளுக்கு ஆசிட் டெஸ்ட் வெற்றி - அய்யர்வாளை அது அடையாளம் காட்டிவிட்டது. ஆலயங்களில் இடம்பெறத் தமிழுக்கெல்லாம் தகுதி உண்டா? அது குறித்தெல்லாம் நாம் கவலைப் படக்கூடாது. அங்கே தேவபாஷைக்குத் தான் தகுதி உண்டு என்று குட்டியை விட்டு ஆழம் பார்த்திருக்கிறார் சீனியர்.
இப்போதாவது புத்தி வருமா தமிழர்களுக்கு! குறிப்பாக தினமணியைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் உலகத் தமிழ் பேரமைப்பாளர்களுக்கும், தமிழ்ச் சங்கங்களுக்கும்!
புரட்சிக் கவிஞர் தெளிவாகப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். “தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்...” பார்ப்பான் - பார்ப்பானாகவே இருப்பான். எச்சரிக்கை..! எச்சரிக்கை!!
”பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்;
பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் -எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகுதமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிடநினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம்
ஆக்குவதேஎன்றுணர்வீர்!”
கருத்துகள்