ஒரே திசையில பயணம் பண்ணோம்னா உலகத்தைச் சுத்தலாமா? முடியாதா? இந்த மாதிரி ஒரு கேள்வியை ஒரு சாதாரண சின்னப் புள்ளக்கிட்ட கேட்டோம்னா அது படிச்ச அறிவியலை வச்சே அது விளக்கம் சொல்லும்.
ஆனால், தங்கள் புத்தகங்கள்ல 1000 வருசங்களுக்கு முன்ன சொன்னதெல்லாம் இன்றைய அறிவியல் படியும் உண்மைன்னு சொல்றதுக்கு என்ன குழப்பு குழப்புறாரு இந்த மனுசன். பொறுமையா அந்த துல்கர்னைன் பய்ணத்தைப் பத்தி விளக்கம் தரும் தோழர்களைத் தான் பாராட்டணும்.
பின்னே என்ன? ச்சும்மா... நாங்க அணு விஞ்ஞானத்தை ஆயிரக்கணக்கான வருசத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டமாக்கும். எங்க புராணத்தில தான் அது இருக்குதாக்கும்.. இது இருக்குதாக்கும்னு இந்து மதத்தில பீலா வுடுற ஆளுக மாதிரி, ஒவ்வொரு மதத்துக்காரனும் அள்ளிவுடுறான்யா...
அந்தந்த காலத்து அறிவு தான் அன்றைய இலக்கியங்கள், புராணங்கள், மதநூல்கள் எல்லாத்திலேயும் இருக்கும். ஆப்பிள் அய்பேட் அப்டேட் பண்றது எப்படின்னு திருக்குறள்ல போய்த் தேடக் கூடாது. இன்னும் சொல்லப்போனா... தொலைக்காட்சி தொடர்களால உறவுகள் பாதிக்கப்படுதுன்னு தீர்வைப் போய் வள்ளுவர்ட்ட கேட்கக்கூடாது; அவர் காலத்தில அந்தப் பிரச்சினை இல்லை. அன்றைக்கும் இன்றைக்கும் பொதுவா இருக்கிற பிரச்சினைகளைத் தான் குறள்ல இருந்து எடுத்துக்கணும். கருத்துகளை மட்டும் சொன்ன திருக்குறளுக்கே இந்த நிலைமைன்னா, கதைகளை அளந்துவுட்ட மதப் புத்தகங்களெல்லாம் வாயே திறக்கப்புடாது..
அறிவாளி படத்தில தங்கவேலு பூரி செய்ய கத்துக் கொடுக்குறப்போ, ’அது தான் எனக்குத் தெரியுமே’, ’அது தான் எனக்குத் தெரியுமே’ன்னு சொல்ற தங்கலட்சுமி..மீ..மீ.. மீ.. மாதிரி எந்த அறிவியல் செய்தின்னாலும், இது தான் எங்க கிட்ட இருக்குதே... இது தான் எங்க கம்புக்கூட்டுக்குள்ள இருக்குதேன்னு புளுகுறதே இந்த மதவாதிகளுக்குப் பொழைப்பாப் போச்சு... இருக்குன்னா அதை முன்னாடியே மக்களுக்குத் தெரிய வைக்க வேண்டியது தானே! இல்லை, இந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்ன, இந்த அறிவியல் போக்கின் அடுத்த கட்டம் என்னன்னு ஒழுங்க அந்தந்த புத்தகங்கள்ல ரெஃபர் பண்ணிச் சொல்லிடணும். என்ன அறிவியல்னு அடிப்படையே புரிஞ்சுக்காம உளறிக் கொட்டிக்கிட்டு சும்மா தொல்லை பண்ணக் கூடாது.
அப்புறம் ஒரு டிஸ்கி: இந்தக் காட்சியில வர்ற முதல் 5 நிமிசத்துக்கு நான் ஜவாப் தாரியில்ல... தண்ணியடிச்சவன் உளறுன மாதிரி தான் இருக்கும். அதையெல்லாம் கடந்து பொறுமையா அதைக் கேட்டாத் தான், ஒண்ணும் இல்லாத ஒரு புளுகலை என்னா விளக்கு விளக்குறார்ன்னு புரிஞ்சுக்க முடியும். (90டிகிரி காட்டும் போது இவர் பாத்திரம் வெளக்குற ஸ்டைலுக்கே கிளாப்ஸ் அள்ளும் போங்க...)
கருத்துகள்