முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அது ஒரு மழைநாள்!

அது ஒரு மழைநாள்! பள்ளி விரைவாக மூடப்பட்டுவிட்டது. நான் ஆறாம் வகுப்பில் எஸ்.எம்.எஸ். பள்ளியில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளி விரைவாக விட்டாலே எழும் குதூகலம் - மழையைத் தாண்டி எங்களை மகிழ்ச்சியில் நனைத்திருக்கிறது.

எப்போதும் பள்ளிவிடும் நேரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல வரும் அய்யாவுக்கு (அப்பாவுக்கு Samy Samatharmam) சீக்கிரம் பள்ளி மூடப்பட்ட தகவல் தெரியாதே என்று எனக்கொரு சந்தேகம். அப்போது நாங்கள் இருந்த திருவள்ளுவர் திருநகர், சர்ச் 5-ஆம் தெருவிலேயே ’நரம்பி’ என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் நாராயணன் என் வகுப்பிலேயே என்பவனும் படித்துவந்தான். இன்னொரு வகுப்புத் தோழன் வேலுச்சாமியுன் உடன் சேர மழைவிட்டு தூறிக் கொண்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கிவிட்டோம்.

நடக்கத் தொடங்கியதற்கு இவ்வளவு பில்ட் அப்பா? என்று கேட்கத் தோன்றலாம். காரணம் உண்டு. பள்ளிக்கோ எங்குமோ நடந்து சென்று பழக்கமில்லாத ஆள் நான். எத்தனைப் பணி இருந்தாலும், சரியான நேரத்திற்கு எங்களை அய்யா வந்து அழைத்துச் செல்லாத நாளே இல்லை. எங்கள் அய்யாவின் வண்டிச் சத்தம் கேட்டாலே என்னுடன் படிக்கும் மாணவர்கள் கூட பள்ளி முடியப்போகிறது என்ற மகிழ்ச்சிக்கு வந்துவிடுவார்கள். காலை, மதியம், மாலை என்று எப்போதும் அய்யாவின் வாகனம் தான். தரையில் கால் படவிட்டதில்லை என்பார்களே அப்படித் தான் - சைக்கிள் வைத்திருந்த காலத்திலிருந்து டிவிஎஸ் சேம்ப் ஓட்டும் காலம் வரை!

மழையில் நனைய ஆசைப்படும் ஹீரோயின்களைப் போல, அன்று நாங்களும் தூறலில் நனைந்தபடி, சாலையில் ஓடும் மழைநீரில் கால் நனைத்தபடி நடந்துகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. இயக்கப் பேரணிகள் தவிர நடப்பதை வேறெங்கு நடப்பதையும் நான் விரும்பியதில்லை. ஆனால், அன்று நடந்தே வீடுவந்து சேர்கிறேன். வழியில் வேலுச்சாமி விடைபெற்றுக் கொள்ள, நரம்பியும் நானும் மட்டும் திருவள்ளுவர் திருநகர் வரை வந்து சேர்ந்தோம். எப்படி நடக்கத் தொடங்கினேன் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. (நடக்கிறது தப்புன்னெல்லாம் சொல்ல வரல...)

கல்லுக்கட்டியிலுள்ள எங்கள் பெரிய கடையைத் தாண்டிச் சென்ற மாணவர்கள் மூலமாக பள்ளிவிட்ட தகவல் எங்கள் அய்யாவுக்குத் தெரியவர, அப்போது எங்களிடமிருந்த அம்பாசிடர் TN 63- 1279 வண்டியை எடுத்துக் கொண்டு வேறு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்கையையும் (Princess Samadharmam)அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பார்த்த அய்யாவுக்கு என்னைக் காணாததும் கலக்கம். அன்றென்று பார்த்து, அந்த மழையில் மகிழ்ந்தபடி அண்ணன்கள் இருவரும் ( Periyar SocratesEnnares Bradla ) தியாகராசன் தெருவிலிருந்த சிறிய கடையை மூடிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு என்னை அழைத்துச் செல்ல அய்யாவுடன் வந்திருக்கிறார்கள்.

பள்ளியில் நான் இல்லாததால், நான் நடந்து சென்றிருக்கக் கூடும் என்று யோசிக்கக் கூட அவர்களால் முடியவில்லை. பிறகு நான் கிளம்பிச் சென்றதைப் பார்த்த பள்ளிக்கூட பியூன் சொன்னதும் தான் வழியில் என்னைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள். பிறகு தேடியபடியே வீடு வந்துசேர, மழையில் நனைந்தபடி வந்ததற்காக அண்ணன்களெல்லாம் திட்ட, ‘ச்சும்மா வந்துட்டேன்’னு சொல்லிவிட்டு, கிளம்பி விஜயா டீச்சர் வீட்டுக்கு டியூசனுக்குப் போய்விட்டேன்.

எப்போதும் TVS Champ வண்டியில் அழைக்கவரும் அய்யா, மழை முடிந்து சாலையெல்லாம் சேறாக இருக்கும் என்பதால் அன்று சைக்கிளில் வந்தார். நான் நடந்து வந்தது குறித்து விஜயா டீச்சரிடம் அங்கலாய்த்துவிட்டு, என்னைப் பின்னால் அமர வைத்தபடி வீட்டுக்கு அழைத்துவந்தார். வரும் வழியெல்லாம், நான் தனியாக வந்தது குறித்தும், மழையில் நடந்து வந்தது குறித்தும் தனது கவலையையும், அச்சத்தையும் சொல்லியபடி, மாலையில் அண்ணன்கள் கோபித்துக் கொண்டதற்கு சமாதானம் தெரிவிக்கும்வண்ணம் பேசியபடியே வந்தார். ‘இப்படில்லாம் தனியா வரக்கூடாதுய்யா... மழை நேரம் ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன பண்றது? கொஞ்சம் லேட் ஆனாலும், நீ ஆபிஸ் ரூம்ல... இல்லைன்னா, ஹெச்.எம் ரூம்ல போய் உட்கார்ந்துக்க...’ என்று பேசியபடியே வந்தார். 
உருகிப்போய் நான் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருக்க, என்னை உருவாக்கியவர் கலக்கத்துடன் என்னுடன் பேசிக் கொண்டுவர, அந்த இரவு வேளையில் மெல்லிய காற்றுடன் வீசிய, மழையில் நனைந்த சாலையின் மணத்தை இப்போது என் நாசியில் நுகரவைத்துவிட்டது - இந்த ஓவியம். இன்னும் ஆயிரமாயிரம் நினைவுகளை நெஞ்சில் நினைக்கவைத்துவிட்டீர்கள் தோழர் Mani Varma! நன்றி... நன்றி...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam