இரவு 10:30 மணிக்கு ஒருவர் பெரியார் திடலுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். “சார், டி.என்.பி.எஸ்.சி-க்கு விண்ணப்பம் போடணும். இன்னிக்கு நைட் 11 மணி வரைக்கும் போடலாம்னாங்க... எனக்கு இங்க இண்டர்நெட் -டெல்லாம் கிடையாது சார். என் ஒன் டைம் நெம்பர வைச்சு விண்ணப்பம் போடணும் சார்” என்றார்.
யாருக்காவது போட்டு, இங்கே தப்பாக வந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் “சார், நீங்க போட்டிருப்பது பெரியார் திடல் எண்ணுக்கு. இந்த விசயத்தில நான் என்ன பண்ணனும்னு எனக்குப் புரியல... எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியாது” என்றேன்.
“இல்ல சார்... டி.என்.பி.எஸ்.சி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் கேளுங்க-ன்னு இந்த நம்பர் பேப்பர்ல முன்னாடி வந்திருந்தது சார். அதை எடுத்து வச்சிருந்தேன் சார். நான் தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தில இருக்கேன். டிஸ் ஏபில்டு சார்” என்றார்.
“சரிங்க... நீங்க சொல்ற பெரியார் பயிலக அலுவலகம் காலை 10 மணிக்கு தான் தொடங்கும். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், என்னிடம் இணைய இணைப்பு இருக்கு.. என்ன செய்வதென்று நீங்கள் சொன்னால் நான் செய்து தருகிறேன்.” என்றேன்.
அவர் சொன்ன தகவல்கள் போதாமல் வழக்கறிஞர் சிவஞானம் அவர்களிடமும் அவ்வப்போது விவரங்களைக் கேட்டு எப்படி எதை எதை நிரப்புவது? என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் குறித்து கேட்டுக் கொண்டேன். மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்டு அவரது நிரந்தப் பதிவு எண்ணைக் கேட்டால் அவர் சொல்வது போகவில்லை. பிறகு அவரது மின்னஞ்சல் முகவரியில் தேடிப் பார்த்து வேறொரு எண்ணையும், அதன் கடவுச் சொல்லையும் எடுத்தும் கூட, டி.என்.பி.எஸ்.சி தளத்துக்குள் செல்ல முடியவில்லை.
சரி, புதிய விண்ணப்பம் பதிந்து விடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு 20 நிமிடம் செலவழித்து, அத்தனை விவரத்தையும் நிரப்பி, முடியப்போகிறது என்ற நிலையில், விண்ணப்பதாரரின் படத்தையும், கையொப்பத்தையும் கேட்டுவிட்டார்கள்.
அடக் கொடுமையே! அத்தனை முயற்சியும் வீண்! குறுந்தகவல் வாயிலாகவாவது ஏதாவது படம் இருந்தால் அனுப்புங்கள் என்றேன். வழியில்லை. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த நிரந்தரக் கணக்கு எண்ணும் வேலை செய்யவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.
இதோ 11:59 ஆகிவிட்டது. 1:30 மணி நேரம் இதற்கான முயற்சிகள் பயன்பட வில்லை.
இதில் கொஞ்சம் வருத்தம் தான். கடைசி நேரத்தில் இப்படி கேட்டு, உதவ முடியவில்லையே என்ற வருத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டோரே என்று கூட அவரிடம் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனாலும், அவர் பெரியார் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு உழைத்த நிம்மதி கிடைத்தது. அடுத்த முறை நேரத்தில் முயலுங்கள் நண்பா!
யாருக்காவது போட்டு, இங்கே தப்பாக வந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் “சார், நீங்க போட்டிருப்பது பெரியார் திடல் எண்ணுக்கு. இந்த விசயத்தில நான் என்ன பண்ணனும்னு எனக்குப் புரியல... எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியாது” என்றேன்.
“இல்ல சார்... டி.என்.பி.எஸ்.சி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் கேளுங்க-ன்னு இந்த நம்பர் பேப்பர்ல முன்னாடி வந்திருந்தது சார். அதை எடுத்து வச்சிருந்தேன் சார். நான் தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தில இருக்கேன். டிஸ் ஏபில்டு சார்” என்றார்.
“சரிங்க... நீங்க சொல்ற பெரியார் பயிலக அலுவலகம் காலை 10 மணிக்கு தான் தொடங்கும். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், என்னிடம் இணைய இணைப்பு இருக்கு.. என்ன செய்வதென்று நீங்கள் சொன்னால் நான் செய்து தருகிறேன்.” என்றேன்.
அவர் சொன்ன தகவல்கள் போதாமல் வழக்கறிஞர் சிவஞானம் அவர்களிடமும் அவ்வப்போது விவரங்களைக் கேட்டு எப்படி எதை எதை நிரப்புவது? என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் குறித்து கேட்டுக் கொண்டேன். மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்டு அவரது நிரந்தப் பதிவு எண்ணைக் கேட்டால் அவர் சொல்வது போகவில்லை. பிறகு அவரது மின்னஞ்சல் முகவரியில் தேடிப் பார்த்து வேறொரு எண்ணையும், அதன் கடவுச் சொல்லையும் எடுத்தும் கூட, டி.என்.பி.எஸ்.சி தளத்துக்குள் செல்ல முடியவில்லை.
அடக் கொடுமையே! அத்தனை முயற்சியும் வீண்! குறுந்தகவல் வாயிலாகவாவது ஏதாவது படம் இருந்தால் அனுப்புங்கள் என்றேன். வழியில்லை. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த நிரந்தரக் கணக்கு எண்ணும் வேலை செய்யவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.
இதோ 11:59 ஆகிவிட்டது. 1:30 மணி நேரம் இதற்கான முயற்சிகள் பயன்பட வில்லை.
இதில் கொஞ்சம் வருத்தம் தான். கடைசி நேரத்தில் இப்படி கேட்டு, உதவ முடியவில்லையே என்ற வருத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டோரே என்று கூட அவரிடம் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனாலும், அவர் பெரியார் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு உழைத்த நிம்மதி கிடைத்தது. அடுத்த முறை நேரத்தில் முயலுங்கள் நண்பா!
கருத்துகள்