இயக்கம் தான் எங்களுக்குக் குடும்பம். தந்தை வழி தாய், தந்தையர் தான் நான் பார்த்து வளர்ந்த பாட்டி, தாத்தா. (தாய் வழி தாத்தா, பாட்டி எனக்கு நினைவு தெரியும் முன்பே மறைந்துவிட்டார்கள்) அவர்களைத் தவிர்த்து சிறு குழந்தை பருவத்திலிருந்து எனக்குத் தெரிந்த தாத்தா, பாட்டி என்றால் அது வக்கீல் தாத்தா, வக்கீல் பாட்டி தான்.
எங்கள் தாத்தா காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் செயலாளர் என்றால் சிவகங்கை வக்கீல் சண்முகநாதன் அவர்கள் தான் மாவட்டத் தலைவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் கடுமையான எதிர்ப்பின் இடையே இயக்கத்தை வளர்ந்த பெரியார் தொண்டர்கள்.
இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து உழைக்கச் சளைக்காத இருவர் என்றால் அது எங்கள் அவ்வா பேராண்டாள் அவர்களும் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்களும் தான். போராட்டக் களத்தில் நிற்கும் தங்கள் இணையர்களுக்குத் தோள்கொடுத்து குடும்பத்திலும், கழகத்திலும் தங்கள் பங்கைச் செலுத்தியவர்கள். போராட்டம், மாநாடுகள், இயக்கக் கூட்டங்கள் - எது என்றாலும் ஆபத்துக்கு அஞ்சாமல் போராடியவர்கள். காங்கிரசின் எதிர்ப்பை மீறித் தான் அத்தனை பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் அந்நாளில்! அத்தனையையும் கடந்து தங்கள் இறுதிக் காலம் வரைக்கும் கழகத்தில் பங்காற்றியவர்கள்.
தங்கள் பிள்ளைகளை, குடும்பத்தை இயக்கத்துக்கு ஒப்படைத்த பெருமைக்குரியவர்கள். ஒருங்கிணைந்த ராமநாதபுரம் பிரிந்து சிவகங்கை மாவட்டமாக ஆனபிறகும், பின்னர் இயக்க வசதிக்காக காரைக்குடி- சிவகங்கை என இரண்டு மாவட்டங்களாக (கழக அமைப்பில்) பிரிக்கப்பட்ட பின்னரும் கூட எங்களுடையது குடும்ப உறவு தான்.
அந்த தாத்தா, அவ்வா வரிசையில் மற்ற மூவரும் மறைந்தபிறகும், உடல்நலிவுற்ற நிலையிலும் மாநாடுகளிலும், போராட்டங்களிலும் பங்கு கொண்டு வந்தவர் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்கள். அவர்கள் நேற்று மறைவுற்றார் என்ற செய்தி கிடைத்தது. கழகத்தின் சார்பிலும், குடும்பத்தின் சார்பிலும் காரைக்குடியிலிருந்து சென்று வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.
அந்த வீராங்கனைக்கு எங்கள் வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
எங்கள் தாத்தா காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் செயலாளர் என்றால் சிவகங்கை வக்கீல் சண்முகநாதன் அவர்கள் தான் மாவட்டத் தலைவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் கடுமையான எதிர்ப்பின் இடையே இயக்கத்தை வளர்ந்த பெரியார் தொண்டர்கள்.
இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து உழைக்கச் சளைக்காத இருவர் என்றால் அது எங்கள் அவ்வா பேராண்டாள் அவர்களும் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்களும் தான். போராட்டக் களத்தில் நிற்கும் தங்கள் இணையர்களுக்குத் தோள்கொடுத்து குடும்பத்திலும், கழகத்திலும் தங்கள் பங்கைச் செலுத்தியவர்கள். போராட்டம், மாநாடுகள், இயக்கக் கூட்டங்கள் - எது என்றாலும் ஆபத்துக்கு அஞ்சாமல் போராடியவர்கள். காங்கிரசின் எதிர்ப்பை மீறித் தான் அத்தனை பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் அந்நாளில்! அத்தனையையும் கடந்து தங்கள் இறுதிக் காலம் வரைக்கும் கழகத்தில் பங்காற்றியவர்கள்.
தங்கள் பிள்ளைகளை, குடும்பத்தை இயக்கத்துக்கு ஒப்படைத்த பெருமைக்குரியவர்கள். ஒருங்கிணைந்த ராமநாதபுரம் பிரிந்து சிவகங்கை மாவட்டமாக ஆனபிறகும், பின்னர் இயக்க வசதிக்காக காரைக்குடி- சிவகங்கை என இரண்டு மாவட்டங்களாக (கழக அமைப்பில்) பிரிக்கப்பட்ட பின்னரும் கூட எங்களுடையது குடும்ப உறவு தான்.
அந்த தாத்தா, அவ்வா வரிசையில் மற்ற மூவரும் மறைந்தபிறகும், உடல்நலிவுற்ற நிலையிலும் மாநாடுகளிலும், போராட்டங்களிலும் பங்கு கொண்டு வந்தவர் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்கள். அவர்கள் நேற்று மறைவுற்றார் என்ற செய்தி கிடைத்தது. கழகத்தின் சார்பிலும், குடும்பத்தின் சார்பிலும் காரைக்குடியிலிருந்து சென்று வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.
அந்த வீராங்கனைக்கு எங்கள் வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
கருத்துகள்