முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (நன்றி: ஒன் இந்தியா)


  • இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! 
  • இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாகவும் இதைப் பயன்படுத்தலாம். 
  • வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். 
  • ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடைஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம். (http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
  • அப்படியே கன்னி மேரி கண்களிலிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப்படும்போதும் இதைப் பின்பற்றலாம். 
  • தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். 
  • இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33)  ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? 
  • இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரிசோதனைக்கு நாங்கள் தயார்! இயேசுவுக்கு வசதி எப்படி?

கருத்துகள்

ராஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல யோசனைகள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நெற்றியடி. அது மட்டுமில்லை அவ் ரத்தத்தின் மரபணுக்களை ஆராய்ந்து இயேசுவுக்கு தந்தை வழி குரோமோசோம்கள் கிடையாது, கன்னித் தாய்க்கு பிறந்தவர் என்பதைக் கூட நிரூபித்துவிடலாமே. எங்கே நம் தமிழகத்து பகுத்தறிவு பிற்போக்குவாதிகள்? வந்து ஆராய்ந்துவிட்டு விடை சொல்லட்டும். சில வேளை சிலைக்குள் ரத்தம் வடியும் ஆய்வை மேற்கொள்வோருக்கு நோபல் பரிசும் கிட்டலாம், அரிய சந்தர்ப்பம் தான். உண்மை பகுத்தறிவை பேசிய தபோல்காரை கொன்று விட்டோம், யேசுவின் கண்ணீரல்ல கழிவறை நீரே சிலையில் வடியுது எனக் கூறிய உண்மையால் இந்திய அரசே சனல் எடமருக்குவை நாடு கடத்தி விட்டது. அவர்கள் இருந்தாவது முதுகெலும்போடு இப்படிப்பட்ட கூத்துக்களை ஆராய்ந்திருப்பர். நம் உள்ளூரில் பெரியாரின் வாரிசுகள் என தம்பட்டம் அடிக்கும் பலரும் எங்கே?!!
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த இரத்தம் வடிவது அடிக்கடி இத்தாலியில் தான் நடப்பது, இப்போ இடம் மாற்றி விட்டார்களா?
உங்கள் ஆலோனையைப் பின்பற்றலாம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent.

All religions fool people.

Some years ago, Pillayar drank Milk. They fooled people.

This time Jesus.

Tomorrow Allah.

Day after tomorrow Murugan

etc.etc.

All are cheats and rascals.
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏசுவைப் போல விமர்சனங்களுக்கும் தாக்குதல்களுக்கும் உட்பட்டவர் உலகத்தில் வேறுயாரும் இருக்க முடியாது. அதையெல்லாம் மத தீவிரவாதிகள் எதிர்த்த காலங்கள் ஏறக்குறைய முடிந்தே போய்விட்டன.இன்றைக்கு டேன் பிரவுன் போன்று மற்றொருவர் இன்னொரு புனை கதையை எழுதினாலும் அப்படியா என்று கேட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்கப்போகும் கிருஸ்துவர்களே அதிகம்.
Saravana இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Saravana இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Saravana இவ்வாறு கூறியுள்ளார்…
முக்கியமான ஒன்றை இந்த நேரத்தில் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், இதே போல் தான் மும்பை மகீம் மற்றும் பாந்திரா மவுண்ட் மேரி(மலைமாதா) கோவில் ஏசு சிலை மற்றும் மேரி சிலையில் இருந்து இரத்தம் வடிவது பற்றிய செய்தி வெளியானது. உடனே நாடு முழுவதிலுமிருந்து பல பேர் ஆலயத்திற்கு வந்து குவிந்தனர். சிறப்பு ரெயில் ஒன்று கோவாவில் இருந்து விட்ட சம்பவம் கூட நடந்தது, ஆனால் இது குறித்து இரகசிய ஆய்வு செய்த நாத்திகவாதி நரேந்திர தபோல்கர் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். அது சாதாரணமாக பழைய கட்டிடங்களில் உள்ள கீரல்களில் கசிந்து வரும் இரும்பு துரு கலந்த நீர். இங்கும் அதே தான் நடந்த ஈரப்பதம் கலந்த காற்று சிலையில் இடைவெளிகளில் உள்ள புகுந்து சிலையில் உள்ள இரும்பு சட்டம், மற்றும் கம்பியில் படிகிறது, நாட்கள் ஆக அவை நீராக மாறி இரும்புத்துருவுடன் கிடைத்த இடைவெளியில் கசியத்துவங்குகிறது, பொதுவாக ஏசு சிலை மற்றும் மாதா சிலை தூய வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் அந்த துரு நிறம் அடர் சிவப்பில் வெளிவருகிறது, இதனைத்தான் ஏசு சிலையில் இரத்தம் வடிகிறது, மாதா சிலை இரத்தக்கண்ணீர் வடிகிறது என்று கூறுகிறார்கள், என ஆதாரத்துடன் கூறினார். இதை சில பத்திரிக்கைகளும் வெளியிட்டனர். இந்த செய்தி வெளிவந்த பிறகு வடக்கே இது போன்ற செய்திகள் நீண்ட நாட்களாக வரவில்லை. ஆனால் இப்போது சென்னையில் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
சரவணா. இராசேந்திரன்
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
சரவணா,
மிகத் தெளிவான அறிவியல் கண்ணோட்டம். ஆனால் இதை மதவாதிகள் (எந்த மதமாக இருந்தாலும்) ஏற்றுக்கொள்ளவார்களா என்பது சந்தேகமே.
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam