முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆம். அந்த நாள் நாளை தான்! (Back to the Future)

ஆம். அந்த நாள் நாளை தான்!

30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த Back to the Future திரைப்படத்தில் கால இயந்திரத்தில் பயணம் செய்து, அவர்கள் வந்து சேரும் நாள் அக்டோபர் 21, 2015.

இதோ, கால வெள்ளத்தில் நாமும் வந்துசேர்ந்துவிட்டோம் அந்த நாளுக்கு! 30 ஆண்டுக்கு முன் வருங்காலம் என்று நீண்டு காணப்பட்ட அந்த நாள் இதோ நிகழ்காலம் என்ற நிலையை எட்ட இருக்கிறது.

அப்படி என்ன சிறப்பு 2015 அக்டோபர் 21க்கு? 2012-இல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதைப் போல ஏதாவது...?

ஒன்றும் கிடையாது.

Back to the Future படத்தில் சொல்லப்படும் சாதாரண நாள் தான். ஆனால், இந்த நாளில் உலகம் (அல்லது ஓர் அமெரிக்க நகரம்) எப்படியிருக்கும் என்று கற்பனையில் உருவாக்கியிருந்த நிலை இன்று நடப்பில் இருக்கிறதா? எவ்வெவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். எவையெல்லாம் எதிர்பார்ப்பைத் தாண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குறித்துப் பேச, அறிவியல் புனைவுப் படங்களின் மீதான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள சரியான ஒரு நாளாக இது இருக்கும் என்பத் தான் இந்நாளின் சிறப்பு

எனவே, நாளை Back to the Future படங்களின் திரையிடலுக்கும், மகிழ்ச்சியான ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நம் காலத்தின் அறிவியல் புனைவு படங்கள் பற்றியும், இலக்கியம் பற்றியும் உரையாடுவோம்... பகிர்வோம்... மகிழ்வோம். நாளை முழு நாளும் நமதே!

சிறப்பு விருந்தினர்கள்: 
எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப் படைப்பாளிகளையும் அழைத்திருக்கிறோம். இதில் பங்கேற்க விரும்பும் நம்மில் பலரும் இந்தப் பட்டியலில் அடங்குவோமே! எனவே நீங்களும் சிறப்பு விருந்தினரே!

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

நாள்: மார்ட்டி, டோக் மற்றும் ஜெனிபர் ஆகியோர் கடந்த காலத்திலிருந்து வந்து சேரவுள்ள அதே அக்டோபர் 21, 2015

நேரம்: இந்திய நேரப்படி காலை 11 மணி

வாருங்கள் நிகழ்காலம் ஆகிவிட்ட வருங்காலத்துக்குள் பயணிப்போம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam