ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.
அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.
ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின் ஊடகம்.
எப்போதும் பச்சை நிறத்தில் இரட்டை இலையைத் தாங்கியபடி இருக்கும் அத் தொலைக்காட்சி சோக இசையுடன், கருப்பு நிற தீமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
கட்சி, ஆட்சி எல்லாம் அவருக்கு வந்து சேர்ந்தவை. அவரில்லாமலும் அவை இயங்கி இருக்கின்றன... இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜெயா தொலைக்காட்சி அவருக்கான படைப்பு. அவரைச் சுற்றியே இயங்கிய ஒன்று.
அதன் ஒளிபரப்பைப் பார்க்கிற போது... தன்னை வளர்த்தவரின் குரல் கேட்க ஏங்குகிற சேவகனைப் போல...
தாயை இழந்த ஒரு குழந்தையின் ஆற்றாமை நிறைந்த அரற்றலைப் போல நெஞ்சை அழுத்துகிறது.
ஜெயா டிவி ஓர் உயிராய் இருந்திருந்தால், அதற்கு என் தோளைத் தந்திருப்பேன் போல! அதனால் என்ன... அதன் ஊழியர்களுக்கு என் இரங்கல்.
அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.
ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின் ஊடகம்.
எப்போதும் பச்சை நிறத்தில் இரட்டை இலையைத் தாங்கியபடி இருக்கும் அத் தொலைக்காட்சி சோக இசையுடன், கருப்பு நிற தீமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
கட்சி, ஆட்சி எல்லாம் அவருக்கு வந்து சேர்ந்தவை. அவரில்லாமலும் அவை இயங்கி இருக்கின்றன... இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜெயா தொலைக்காட்சி அவருக்கான படைப்பு. அவரைச் சுற்றியே இயங்கிய ஒன்று.
அதன் ஒளிபரப்பைப் பார்க்கிற போது... தன்னை வளர்த்தவரின் குரல் கேட்க ஏங்குகிற சேவகனைப் போல...
தாயை இழந்த ஒரு குழந்தையின் ஆற்றாமை நிறைந்த அரற்றலைப் போல நெஞ்சை அழுத்துகிறது.
ஜெயா டிவி ஓர் உயிராய் இருந்திருந்தால், அதற்கு என் தோளைத் தந்திருப்பேன் போல! அதனால் என்ன... அதன் ஊழியர்களுக்கு என் இரங்கல்.
கருத்துகள்