முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா?

"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை. //1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும். 2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்ப

பிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபாடு

சொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்! அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும். ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று. திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு. இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். வாரிசு அரசியல், 2ஜி

யாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் நேற்று நடந்து கொண்ட விதம் பற்றி நமக்கு மாற்றுக் கருத்தும், விமர்சனமும் உண்டு. அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட திராவிடர் கழகத் தலைவர் நேற்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது யாருக்கு உவப்பானது, யாருக்கு வெறுப்பானது என்பதையெல்லாம் யோசித்து கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்துக்கு ஒரு போதும் இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர், மாற்றுக் கருத்து கொண்டோர் தாராளமாக தெரிவிப்பதை யாரும் எதிர்க்க முடியாது. தரம்தாழ்ந்த விமர்சனங்களும் வரும் என்பது நமக்குப் புதிதல்ல. அரசியல் தளத்தில் இயங்கும் இயங்கங்களுள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பெரிதும் செயல்படுத்தக் கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பதன் காரணமாகத் தான், அது வலுவோடிருக்க வேண்டும் என்றும், ஆட்சியில் அமர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் வடித்தெடுக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால் ஆதரிக்கிறோம். பா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்பட்ட 1999, 2001 தேர்தல்களைத் தவிர மிகப் பெரும்பாலான தேர்தல்களில் திமுக