முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா?

"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை.

//1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும்.

2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்பற்றுகின்றனர். அவற்றை இந்துமதத்தின் வழக்கங்கள் என்று நம்புவதால் அல்லது நம்பவைக்கப்பட்டிருப்பதால் தங்களை இந்துக்கள் என்று கருதுகின்றனர்.

3. உண்மை இந்துமதம் கொடூரமானதே - ஏனெனில் அதன் அடிப்படை சனாதன தர்மமே! வர்ணதர்மமே!

4. தங்களின் குலசாமிகள் எல்லாம் இரட்டைமடி மீன்வலைகளால் அள்ளப்படுவது போல மொத்தமாக இந்துமதத்தின் பேரால் அள்ளப்பட்டுவிட்டதால், தனித்தன்மையான தங்கள் கடவுள்கள், சிற்சில பொதுத் தன்மைகளின் அடிப்படையில் இந்துமதக் கடவுளரின் கணக்குகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட மயக்கம் தான் தாங்கள் இந்துக்கள் என்னும் நம்பிக்கை!



5. இந்து மதத்தில் நம்பிக்கை இல்லதவர்களாலும் இந்துத்துவம் என்னும் கொள்கைக்கு ஆதரவாக இருக்க முடியும். சவார்க்கர் போன்றோர் கடவுள் நம்பிக்கை அற்றோரே! ஆனால், இந்துத்துவ நோக்காளர் என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் இதை உணர முடியும்.

முக்கிய செய்திகள் நிறைய இருக்கின்றன. முடிந்தால் பிறகு விரிவாக எழுதலாம்.

https://www.facebook.com/princenrsama/posts/10155963628359625

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam