"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை.
2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்பற்றுகின்றனர். அவற்றை இந்துமதத்தின் வழக்கங்கள் என்று நம்புவதால் அல்லது நம்பவைக்கப்பட்டிருப்பதால் தங்களை இந்துக்கள் என்று கருதுகின்றனர்.
3. உண்மை இந்துமதம் கொடூரமானதே - ஏனெனில் அதன் அடிப்படை சனாதன தர்மமே! வர்ணதர்மமே!
4. தங்களின் குலசாமிகள் எல்லாம் இரட்டைமடி மீன்வலைகளால் அள்ளப்படுவது போல மொத்தமாக இந்துமதத்தின் பேரால் அள்ளப்பட்டுவிட்டதால், தனித்தன்மையான தங்கள் கடவுள்கள், சிற்சில பொதுத் தன்மைகளின் அடிப்படையில் இந்துமதக் கடவுளரின் கணக்குகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட மயக்கம் தான் தாங்கள் இந்துக்கள் என்னும் நம்பிக்கை!
5. இந்து மதத்தில் நம்பிக்கை இல்லதவர்களாலும் இந்துத்துவம் என்னும் கொள்கைக்கு ஆதரவாக இருக்க முடியும். சவார்க்கர் போன்றோர் கடவுள் நம்பிக்கை அற்றோரே! ஆனால், இந்துத்துவ நோக்காளர் என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் இதை உணர முடியும்.
முக்கிய செய்திகள் நிறைய இருக்கின்றன. முடிந்தால் பிறகு விரிவாக எழுதலாம்.
https://www.facebook.com/princenrsama/posts/10155963628359625
கருத்துகள்