முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபாடு

சொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்!

அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும்.

ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது.

தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று.

திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு.

இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.



வாரிசு அரசியல், 2ஜி, ஊழல் என்று திமுக மீது வைக்கப்பட்ட ’அவதூறு’களுக்கு மறுப்பு சொன்ன திராவிடர் கழகத்தவர் எவரும் அந்த குற்றச்சாட்டுகளை திமுக மீது எப்போதும் வைக்க மாட்டார்கள்.

நம் கருத்துமாறுபாடுகளை மூளையின் ஒரு மூலையில் போட்டு வையுங்கள். ஒரு நாள் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு அவற்றைப் பேசிச் சிரிப்போம்.

உள்ளாட்சித் தேர்தல்கள் மே 15-க்குள் நடத்தி முடிக்கப்படும் என்ற செய்தி வந்திருக்கிறது. சட்டசபையில் மாபெரும் எதிர்க்கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை வெற்றி பெற்றால், கிட்டத்தட்ட ஆட்சி திமுக கையில் என்பதை மறக்க வேண்டாம். அதற்கான உழைப்பை முன்னெடுப்பதே இப்போது முக்கியம்.

உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!! உள்ளாட்சியை வென்றெடுப்போம்!
எப்படி வசதி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam