முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பன்றியும் பூணூலும்

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன். இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம். இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க! போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது. திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு. ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய? நிற்க, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செ

நீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி!

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது! மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது! பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது! கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்ட