மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது!
மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது!
பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது!
கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்டங்கள், அதன் வெற்றிகளைக் கண்டு பொறுக்காத கும்பலின் பொச்சரிப்பு இது!
இடஒதுக்கீட்டால் தகுதி குறைகிறது, பொதுப் போட்டி இடங்களை அதிகரிக்க வேண்டும், அதில் எங்களை விஞ்ச முடியாது என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களால் கூட எளிதில் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு, பொதுப்போட்டியிலும் வெற்றிக் கொடி நாட்டி, பொதுப் போட்டி இடங்கள் முழுவதையும் நிரப்பிக் காட்டிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட திறமையாளர்களை எப்படியாவது வெளியேற்றிட வேண்டுமென்று குறுக்குவழியில் நடைபோட்ட கொடுங்கோலர்களின் குற்றப் புத்திக்குக் கிடைத்த வெற்றி இது!
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜர் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் அடிநாதத்தை குலைக்கும் முயற்சிக்கு நடுவில் இன்று காமராஜரின் பிறந்தநாள் (15.7.2017)
இந்த நாளன்று காமராஜருக்கு மாலை அணிவிப்பதோடு நம் கடமை முடிந்திடவில்லை. அவர் போட்ட பாதையைத் தகர்க்க நினைக்கும் கும்பலுக்கெதிராக உறுதி பூண வேண்டிய நாள் இது!
இயக்கத்தவர், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் திரளுங்கள்...
நாடெங்கும் காமராஜர் சிலைகள் இருக்கின்றன. உங்கள் குரல்கள் அங்கிருந்து ஒலிக்கட்டும்!
கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது!
மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது!
பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது!
கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்டங்கள், அதன் வெற்றிகளைக் கண்டு பொறுக்காத கும்பலின் பொச்சரிப்பு இது!
இடஒதுக்கீட்டால் தகுதி குறைகிறது, பொதுப் போட்டி இடங்களை அதிகரிக்க வேண்டும், அதில் எங்களை விஞ்ச முடியாது என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களால் கூட எளிதில் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு, பொதுப்போட்டியிலும் வெற்றிக் கொடி நாட்டி, பொதுப் போட்டி இடங்கள் முழுவதையும் நிரப்பிக் காட்டிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட திறமையாளர்களை எப்படியாவது வெளியேற்றிட வேண்டுமென்று குறுக்குவழியில் நடைபோட்ட கொடுங்கோலர்களின் குற்றப் புத்திக்குக் கிடைத்த வெற்றி இது!
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜர் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் அடிநாதத்தை குலைக்கும் முயற்சிக்கு நடுவில் இன்று காமராஜரின் பிறந்தநாள் (15.7.2017)
இந்த நாளன்று காமராஜருக்கு மாலை அணிவிப்பதோடு நம் கடமை முடிந்திடவில்லை. அவர் போட்ட பாதையைத் தகர்க்க நினைக்கும் கும்பலுக்கெதிராக உறுதி பூண வேண்டிய நாள் இது!
இயக்கத்தவர், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் திரளுங்கள்...
நாடெங்கும் காமராஜர் சிலைகள் இருக்கின்றன. உங்கள் குரல்கள் அங்கிருந்து ஒலிக்கட்டும்!
கருத்துகள்