முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பன்றியும் பூணூலும்

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன்.
இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம்.


இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க!

போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது.

திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு.

ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய?

நிற்க,
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செய்வதற்கான) தகுதியும், அனுபவப் பாத்தியதையும் தங்களுக்குத் தான் உண்டு என்பதாக பார்ப்பனர்கள் உரிமைப் பிரச்சினை எழுப்புகிறார்களோ என்னவோ?

உபநயனம் செய்யும் வேளையில் சொல்ல வேண்டிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்யாமல், தேவபாஷையின் மேன்மையைக் குலைத்து விடுவார்களோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.

கடவுள் அவதரிக்க தேர்ந்தெடுத்த உயிரான பன்றியை விடவும், தங்கள் அழுக்குப் பூணூல் மேன்மையானது என்று கருதுவதிலேயே, பார்ப்பனர்கள் ”தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீனம் தூ தெய்வதம் தன் மந்த்ரம் பிராமணாதீனம் பிராமணா மம தேவதா” என்று கடவுளை விடத் தாங்கள் மேலானவர்கள் என்ற மனோநிலையிலிருந்து மாறியதாகத் தெரியவில்லை.
ஆகவே, அவர்கள் பூணூல் அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது.

இதில் வாரண்ட்டே இல்லாமல் சில சில்வண்டுகள், பூணூல் அணிவது தமிழரின் பண்பாடு என்று காமெடி கூட்டி, வண்டியில் ஏறுவதையும் காண முடிந்தது. அதுகளை விட்டுத் தள்ளுவோம்.

பூணூல் அணிவதை, அவாளின் பூர்வாங்க உரிமை என்னும் கருத்திலும், மத உணர்வு என்னும் கருத்திலும் தோழர்கள் சிலர் அணுகியதையும் பார்க்க முடிந்தது. பூணூல் என்பது அவர்களின் உரிமை என்றால், ”நம்மை சூத்திரன் என்று சொல்வதும் அவர்களின் பிறப்புரிமை அதை ஒப்புக் கொள்வோம்” என்பதற்கு ஒப்பாகும்.

பார்ப்பனர்கள் பூணூல் அணிவது பார்ப்பனரல்லாதாரை இழிவுபடுத்தவே!

பார்ப்பனரல்லாதாரில் சிலர் பூணூல் அணிவது - ஒருக்காலும் அவர்களை இந்துமதத்தில் பார்ப்பனர் அந்தஸ்திற்கு உயர்த்தாது. ”நீங்கள் அணியும் நூலில் அல்லாமல்
வேறு நூலிலேனும் நாங்களும் அணிந்துகொள்கிறோமே” என்று கெஞ்சிப் பெருமை தேடுவதாக நினைத்துக் கொள்ளும் நிலையேயாகும்.

நிற்க, இந்தப் பிரச்சினையில் சிலர் திராவிடர் கழகத் தலைவருக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவு செய்வதாகக் கருதிக் கொண்டு ஏதோ படம் போட்டார்களாம்.

கருமம், அவர்களுக்கு இந்துமதத்தில் செருப்பின் நிலை என்னவென்பதும் தெரியவில்லை. 14 ஆண்டுகள் செருப்பு தான் ஆட்சி செய்ததாக ராமாயணம் கூறுகிறது. அப்படிப்பட்ட செருப்பு எப்படி இவர்களுக்கு இழிவானது என்று தெரியவில்லை.

அதேசமயம், செருப்பினால் எதிர்ப்பு தெரிவிப்பதென்பதும் பெரியாருக்கோ, பெரியார் தொண்டர்களுக்கோ புதிதில்லை. பெரியார் தொண்டர்கள் மத்தியில் செருப்பை விட்டெறிந்து ராமனுக்கு செருப்படி வாங்கிக் கொடுத்த நிகழ்வும் நடந்ததுண்டு.

தன் மீது செருப்பை வீசி எறிந்தவர்கள் மத்தியில் மீண்டும் சென்று, மற்றொரு செருப்பையும் ஏற்றுக் கொண்டு ஒரு ஜோடிச் செருப்பைச் சம்பாதித்த நிகழ்வும் நடந்ததுண்டு. அப்படி செருப்பு வீசிய இடத்தில்
அதே பெரியாருக்கு சிலையொன்று முளைத்த வரலாற்றுப் பெருமையும் பெரியாருக்குக் கிடைத்ததுண்டு.

உங்கள் பூணூலைக் காட்டிலும், நாம் காலில் அணியும் செருப்பு சமூகத்திற்கும், எங்கள் - அடுத்தவர் நலனுக்கும் நன்மையானது; பயனுடையது.

எந்தச் செருப்பாலும் இங்கு பூணூல் பருப்பு வேகாது. எனவே, அது குறித்தும் கவலையில்லை.

குறிப்பு:
சுருக்கமாக எழுத வேண்டுமென்று நினைத்தாலும் நீண்டுவிட்டது. மன்னிக்க!

#பன்றிக்குப்_பூணூல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam