முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே தேர்தல்?

ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்? அதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது. 2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு. என்ன செய்ய? மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான். ”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல்? எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு? எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள். ஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் க